’நீட்’ நுழைவு தேர்வுக் கான விண்ணப்ப பதிவு, நேற்றுடன் முடிந்தது. விண்ணப்ப பதிவில் திருத்தம் செய்வதற்கான அறிவிப்பு, ஒரு வாரத்தில் வெளியாகும்.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, இந்த ஆண்டு முதல், அனைத்து மாநிலங்களிலும், ’நீட்’ தேர்வு கட்டாயமாகிறது. இதற்கான, ’ஆன்லைன்’ விண்ணப்ப பதிவு, மார்ச்சில் துவங்கி, ஏப்., 1ல் முடிய இருந்தது.
அதே நேரம், 25 வயதுக்கு மேற்பட்டோர், ’நீட்’ தேர்வில் பங்கேற்க, உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதனால், விண்ணப்ப பதிவுக்கு, ஏப்., 5 வரை, கூடுதலாக, ஐந்து நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம், நேற்று நள்ளிரவுடன் முடிந்தது.இனி யாரும் விண்ணப்பிக்க முடியாது.
விண்ணப்ப பதிவில் தவறுகள் இருந்தால், அதை திருத்துவதற்கான அறிவிப்பு, இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும் என, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment