Monday, February 8, 2016

மருத்துவ உயர் படிப்புகள்; பிப்., 14ல் நுழைவு தேர்வு

மருத்துவ உயர் படிப்புகளுக்கான, மாநில ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு, பிப்., 14ல் நடக்கிறது.

தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகளில், மருத்துவ உயர் படிப்புகளுக்கு, 1,200 இடங்கள் உள்ளன. இதில், 50 சதவீத இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு சென்று விடும். மீதமுள்ள, 600 இடங்களுக்கு, 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கான நுழைவுத் தேர்வு, பிப்., 14ல் நடத்தப்படும் என, தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான நுழைவுத் தேர்வு, டிச., மாதம் நடந்தது. சென்னையில் மட்டும், வெள்ளப்பாதிப்பால் ஒத்தி வைக்கப்பட்ட இந்த தேர்வு, ஜன., 11ல் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment