Thursday, July 24, 2014

எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு இன்று நிறைவு

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.- பிடிஎஸ் 2-ஆம் கட்டக் கலந்தாய்வு வெள்ளிக்கிழமையுடன் (ஜூலை 25) நிறைவடைகிறது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் கடந்த 21-ஆம் தேதி எம்.பி.பி.எஸ்.-பிடிஎஸ் 2-ஆம் கட்டக் கலந்தாய்வு தொடங்கியது.
தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள் உள்பட சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் ஏற்பட்ட அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் இருந்த காலியிடங்கள் என அனைத்தும் நிரப்பப்பட்டுவிட்டன.
சுயநிதி பல் மருத்துவக் கல்லூரி 1,020 அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்களை நிரப்பும் பணி கடந்த 2 நாள்களாக நடைபெற்று வருகிறது. கலந்தாய்வின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை மீதமுள்ள 314 அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

No comments:

Post a Comment