பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, மருத்துவம்சார்ந்த பட்டப் படிப்புகளில் உள்ள, 7,745இடங்களுக்கு, 18 ஆயிரத்து, 324 பேர்விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில், பாரா மெடிக்கல் என்ற, பி.பார்ம்., -பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது விதமருத்துவப் படிப்புகளுக்கு, அரசு கல்லுாரிகளில், 555இடங்கள்; சுயநிதி கல்லுாரிகளில், மூன்று விதபடிப்புகளுக்கு, 7,190 இடங்கள் என, 7,745 இடங்கள்உள்ளன. 20 ஆயிரத்து, 247 பேர் விண்ணப்பங்கள்பெற்றிருந்தனர்.
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க, நேற்று முன்தினம்கடைசி நாள். மொத்தம், 18 ஆயிரத்து, 324 பேர்விண்ணப்பங்கள் வந்துள்ளன. அடுத்த வாரம் தர வரிசை பட்டியல் வெளியிடப்படும்; இம்மாத இறுதியில்கலந்தாய்வு நடத்தப்படும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment