நீட் தேர்வு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில், புதுச்சேரி பெற்றோர், மாணவர் நல சங்கம் தொடர்ந்த வழக்கு, இன்று (19ம் தேதி) விசாரணைக்கு வருகிறது.
இது குறித்து சங்க பொருளாளர் வி.சி.சி. நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில், அகில இந்திய மருத்துவ கழக பரிந்துரையில் (நீட்) அகில இந்திய தகுதி நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, கடந்த மாதம் 16ம் தேதி முடிவுகள் வெளியிடபட்டது,ஆனால், தேர்வு பெற்றவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடாததால் புதுச்சேரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தனியார் மருத்துவக் கல்லூரிகள், வெளிமாநில மாணவர்களை சேர்த்து வருகிறது. புதுச்சேரி மருத்துவதுறை இயக்குனரிடம் முறையிட்டும் பலனில்லை.
எனவே, நீட் தேர்வு குறித்து தெளிவான முடிவெடுக்காமல் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்த கூடாது என்றும், மாநில அரசுக்கு வழிகாட்டுதல் வேண்டியும் சுப்ரீம் கோர்ட்டில், மாணவர் பெற்றோர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது,
இதை, இன்று (19ம் தேதி) அவசர வழக்காக சுப்ரீம் கோர்ட் எடுத்துக்கொண்டு விசாரிக்க உள்ளது. மேலும், நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை, நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகள் தன்னிச்சையாக தேர்வு செய்யக்கூடாது என, சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடைவிதித்துள்ளதால், தீர்ப்பு வரும் வரையில் கல்லுாரிகளுக்கு பணம் கட்ட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment