தமிழகத்தில், பாரா மெடிக்கல் எனப்படும், பி.பார்ம்., - பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது வித மருத்துவப் படிப்புகளுக்கு, அரசு கல்லுாரிகளில், 555 இடங்கள் உள்ளன.
சுயநிதி கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங் - பி.பார்ம்., மற்றும் பிசியோதெரபி என்ற, மூன்று படிப்புகளுக்கு, 5,303 இடங்கள் உள்ளன; இந்த படிப்புகளுக்கு, 8,000 பேர் வரை விண்ணப்பித்து இருந்தனர்.
இதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஆக., 22ம் தேதி துவங்கியது; இரண்டு நாளில், அரசு கல்லுாரி இடங்கள் நிரம்பின; சுயநிதி கல்லுாரிகளிலும், 85 சதவீத இடங்கள் நிரம்பி விட்டன; கலந்தாய்வு, இன்றுடன் நிறைவு பெறுகிறது.
மீதி இடங்கள் இருந்தால், அடுத்த கலந்தாய்வில் நிரப்பப்படும் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment