Wednesday, September 7, 2016

மருத்துவ மாணவர் சேர்க்கை; சுயநிதி கல்லூரிகளுக்கு அனுமதி!

 சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்எம்.சி.ஐ.எனும்இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின் படிசுயநிதி மருத்துவ கல்லுாரிகளில்மாணவர் சேர்க்கை நடத்ததமிழக அரசு அமைத்த கண்காணிப்புக் குழு அனுமதி அளித்துள்ளது.

நீட் எனப்படும்தேசிய பொது நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியான பின்னும்தமிழகத்தில் உள்ள சுயநிதி கல்லுாரிகளில்மாணவர் சேர்க்கை தொடர்பாகபல குழப்பங்கள் நீடித்தன. சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின்படிமாணவர் சேர்க்கையைகல்லுாரிகளே நடத்தலாம் எனதமிழக அரசு அமைத்தசுயநிதி கல்லுாரிகளை கண்காணித்து ஒழுங்குபடுத்தும் குழு,அனுமதி அளித்துள்ளது.
குழுவின் தலைவராக நீதிபதி அப்துல்காதிஉறுப்பினர்களாகசுகாதார செயலர் ராதாகிருஷ்ணன்,எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி உள்ளிட்டோர் உள்ளனர். சமீபத்தில் நடந்த இந்தக் குழு கூட்டத்தில்இதற்கான அனுமதி தரப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள்விரும்பிய கல்லுாரிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கல்லுாரிகளே,தரவரிசை வெளியிட்டுமாணவர் சேர்க்கையை நடத்தும். இதன்படிசுயநிதி கல்லுாரிகளில் விண்ணப்ப வினியோகம்நேற்று துவக்கியது. 
மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள்செப்., 20ல் துவங்கி, 30க்குள் முடிக்கவும்கண்காணிப்பு குழு அறிவுறுத்தி உள்ளது.

No comments:

Post a Comment