தெலுங்கானாவில் நடந்த மருத்துவ நுழைவுத்தேர்வில்,முன்கூட்டியே, கேள்வித்தாள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது.
அங்கு, ஜூலை 9ல், பொது நுழைவுத்தேர்வு நடந்தது. இதில், மருத்துவ நுழைவுத்தேர்வு கேள்வித்தாள்கள் முன்கூட்டியே வெளியாகி உள்ளன. பெங்களூரில், கல்வி ஆலோசனை நிறுவனம் ஒன்றை நடத்தி வரும், ராஜகோபால் ரெட்டி என்பவர், இந்த முறைகேட்டின் மூளையாக செயல்பட்டு உள்ளார்.
இதற்காக அவர், மாணவர்களின் பெற்றோரிடம், தலா, 20 லட்சம் ரூபாய் முன்பணம் பெற்றுள்ளார்.ஐதராபாத்தைச் சேர்ந்த விஷ்ணு, ரமேஷ், திருமால் ரெட்டி ஆகிய மூன்று பேரும், ஏஜன்டுகளாக செயல்பட்டு உள்ளனர்.
டில்லியில் கேள்வித்தாள் அச்சடிக்கும் அச்சகத்தை தொடர்பு கொண்டு, அவர்களுக்கு லஞ்சம் கொடுத்து,கேள்வித்தாளை பெற்றுள்ளனர். பின், 70 மாணவர்களுக்கு, இந்த கேள்வித்தாளை வினியோகித்து உள்ளனர்.இதன் மூலம், 15 கோடி ரூபாய் வரை பணம் பெற்றுள்ளனர்.
இந்த விவகாரம் வெளியானதை தொடர்ந்து, தெலுங்கானா மாநில சி.பி.சி.ஐ.டி., போலீசார், அவர்கள் அனைவரையும் கைது செய்தனர். மேலும் இருவரை, தேடி வருகின்றனர். இதையடுத்து,நுழைவுத்தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த, அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
No comments:
Post a Comment