புதிய கல்விக்கொள்கை உள்ளீட்டில், நாடு முழுக்க ஒரே பாடத்திட்டத்தை பின்பற்றும் அறிவிப்பால், தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்வதில், சிக்கல் இருக்காது என்ற கருத்து வலுத்துள்ளது.
மத்திய அரசின், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், புதிய கல்வி கொள்கை உருவாக்கும் நோக்கில், 42 பக்கங்கள் அடங்கிய, சில உள்ளீடுகள், ஜூன் 30ல் வெளியிடப்பட்டது. இதற்கு, கருத்து தெரிவிக்க, ஆக., 16 வரை, கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சங்க மாநில பொதுசெயலாளர் கிருஷ்ணராஜ் கூறியதாவது:
நீட் எனும் மருத்துவ நுழைவுத்தேர்வு, சிவில் சர்வீஸ் தேர்வுகளில், சி.பி.எஸ்.இ., எனும் மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தை படிக்கும் மாணவர்கள் தான் அதிகம் தேர்ச்சியடைகின்றனர். சமச்சீர் பாடத்திட்டத்தால், பல மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ.,க்கு, மாறி வருகின்றன. இதனால், கிராமப்புற மாணவர்கள், நுழைவுத் தேர்வு எழுதுவது குதிரை கொம்பு தான்.
புதிய கல்வி கொள்கை படி, நாடு முழுக்க ஒரே பாடத்திட்ட முறை அமலுக்கு வந்தால், கல்வித்திட்ட சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும். ஆனால், இதை கொண்டு வரும் போது, செயல்வழி கற்றலை ஊக்குவிக்க வேண்டும்.
கல்வி கொள்கை உள்ளீட்டில் இருக்கும் சில எதிர்மறை கருத்துகளை திருத்தி, மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தினால், சிறப்பாக இருக்கும். இக்குழுவில், கல்வியாளர்கள், சிறுபான்மையினர், பள்ளி நலச்சங்க பிரதிநிதிகளை, உறுப்பினர்களாக கொண்டு, திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கிருஷ்ணராஜ் கூறினார்.
No comments:
Post a Comment