மருத்துவக் கல்வியை வெறும்வர்த்தகமாக்கியதன் விளைவு
தமிழகத்தின் மருத்துவக் கல்லூரிகளில் 2014-15 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருத்துவப் படிப்பில் சேரு வோருக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தருவதற்காக அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.5 லட்சம் வரை செலவிடப்படுகிறது. தனியார் கல்லூரிகளிலோ அடிப்படைக் கட்டமைப்புகள் இருக்கிறதோ இல்லையோ கோடிக்கணக்கில் பண வசூல் மட்டும் நடக்கிறது. தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒராண்டு கல்விக்கட்டணம் வெறும் 11,500 ரூபாய்தான். 5 ஆண்டுகளில் ரூ.55,000 முதல் ரூ.60,000 வரையிலான செலவில் தரமான மருத்துவப் படிப்பைப் பெற்றுவிடலாம்.
ஆனால் தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக் கழகங்களின் மருத்துவக் கல்லூரிகளில் இந்த நிலை இல்லை. உதாரணத்திற்கு சென்னை அருகே உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஒராண்டுக்கு கல்விக்கட்டணமாக ரூ.9 லட்சமும், எஸ்.ஆர்.எம் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ரூ.7லட்சமும் வசூலிக்கப்படுகிறது. இக்கல்லூரிகளில் மொத்தமாக ஐந்தாண்டுகளைக் கணக்கிட்டால் கிட்டத்தட்ட மாணவர்கள் செலுத்தவேண்டிய கல்விக்கட்டணம் மட்டும் அரைக் கோடியைத் தொடுகிறது. இவையல்லாமல் நன்கொடை என்ற பெயரில் ரூ. 50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வசூலிக்கப்படுகிறது.
முதுகலை மருத்துவப்படிப்பு என்றால் நன்கொடையாக ரூ.2 கோடி வரையும் கல்விக்கட்டணமாக ரூ.30 லட்சம் வரையும் வசூலிக்கப்படுகிறது. இதையெல்லாம் கட்டுப்படுத்த இதுவரை எந்த உருப்படியான ஏற்பாடுகளும் இல்லை. கல்விக் கட்டணக் கொள்ளை குறித்து ஒவ்வொரு ஆண்டும் புகார்கள் வரும் போது நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு போடும். அப்போது வேறுவழியில்லாமல் மாநில அரசால் நியமிக்கப்படும் குழு கல்விக் கட்டணத்தை மட்டுமே ஆய்வு செய்கிறது. நன்கொடை என்ற பெயரில் மறைமுகமாக வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க அதற்கு அதிகாரம் இல்லை. தமிழ்நாட்டில் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை 25 விழுக்காடு உயர்த்திவிட்டன. இப்படி பலகோடி ரூபாய் கொடுத்து படித்து முடித்துவருவோரிடம் சேவை உணர்வை எதிர்பார்க்க முடியுமா? உலகிலேயே மருத்துவப் பணியை பல நாடுகள் சேவை அடிப்படையில் செய்கின்றன.
சின்னஞ்சிறிய நாடான கியூபா இலவசமாக மருத்துவப் படிப்பை வழங்கி தனது மருத்துவர்களை பல ஏழை நாடுகளுக்கு சேவை செய்ய அனுப்புகிறது. அந்நாட்டில் 170 பேருக்கு ஒரு மருத்துவரும் அமெரிக்காவில் 390 பேருக்கு ஒரு மருத்துவரும் உள்ளனர்.
ஆனால் இந்தியாவில் இதெல்லாம் ஒரு கனவாகவே உள்ளது.மக்களின் அடிப்படைத் தேவையாகிய சுகாதாரத்துறையிலும் கல்வித்துறையிலும் அரசு தனது கடமையை படிப்படியாக குறைத்துக் கொண்டே வந்ததன் விளைவு சேவைத்துறைகள் அனைத்தும் இன்று லாப - நட்டம் பார்க்கும் துறைகளாக மாறியுள்ளன. கல்வித்துறையும் சுகாதாரத் துறையும் அரசின் வசம் இருந்தால்தான் இத்தகைய கொள்ளைகளை ஒழிக்கமுடியும், மக்களின்நலன்களைப் பாதுகாக்க முடியும்.
தமிழகத்தின் மருத்துவக் கல்லூரிகளில் 2014-15 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருத்துவப் படிப்பில் சேரு வோருக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தருவதற்காக அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.5 லட்சம் வரை செலவிடப்படுகிறது. தனியார் கல்லூரிகளிலோ அடிப்படைக் கட்டமைப்புகள் இருக்கிறதோ இல்லையோ கோடிக்கணக்கில் பண வசூல் மட்டும் நடக்கிறது. தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒராண்டு கல்விக்கட்டணம் வெறும் 11,500 ரூபாய்தான். 5 ஆண்டுகளில் ரூ.55,000 முதல் ரூ.60,000 வரையிலான செலவில் தரமான மருத்துவப் படிப்பைப் பெற்றுவிடலாம்.
ஆனால் தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக் கழகங்களின் மருத்துவக் கல்லூரிகளில் இந்த நிலை இல்லை. உதாரணத்திற்கு சென்னை அருகே உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஒராண்டுக்கு கல்விக்கட்டணமாக ரூ.9 லட்சமும், எஸ்.ஆர்.எம் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ரூ.7லட்சமும் வசூலிக்கப்படுகிறது. இக்கல்லூரிகளில் மொத்தமாக ஐந்தாண்டுகளைக் கணக்கிட்டால் கிட்டத்தட்ட மாணவர்கள் செலுத்தவேண்டிய கல்விக்கட்டணம் மட்டும் அரைக் கோடியைத் தொடுகிறது. இவையல்லாமல் நன்கொடை என்ற பெயரில் ரூ. 50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வசூலிக்கப்படுகிறது.
முதுகலை மருத்துவப்படிப்பு என்றால் நன்கொடையாக ரூ.2 கோடி வரையும் கல்விக்கட்டணமாக ரூ.30 லட்சம் வரையும் வசூலிக்கப்படுகிறது. இதையெல்லாம் கட்டுப்படுத்த இதுவரை எந்த உருப்படியான ஏற்பாடுகளும் இல்லை. கல்விக் கட்டணக் கொள்ளை குறித்து ஒவ்வொரு ஆண்டும் புகார்கள் வரும் போது நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு போடும். அப்போது வேறுவழியில்லாமல் மாநில அரசால் நியமிக்கப்படும் குழு கல்விக் கட்டணத்தை மட்டுமே ஆய்வு செய்கிறது. நன்கொடை என்ற பெயரில் மறைமுகமாக வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க அதற்கு அதிகாரம் இல்லை. தமிழ்நாட்டில் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை 25 விழுக்காடு உயர்த்திவிட்டன. இப்படி பலகோடி ரூபாய் கொடுத்து படித்து முடித்துவருவோரிடம் சேவை உணர்வை எதிர்பார்க்க முடியுமா? உலகிலேயே மருத்துவப் பணியை பல நாடுகள் சேவை அடிப்படையில் செய்கின்றன.
சின்னஞ்சிறிய நாடான கியூபா இலவசமாக மருத்துவப் படிப்பை வழங்கி தனது மருத்துவர்களை பல ஏழை நாடுகளுக்கு சேவை செய்ய அனுப்புகிறது. அந்நாட்டில் 170 பேருக்கு ஒரு மருத்துவரும் அமெரிக்காவில் 390 பேருக்கு ஒரு மருத்துவரும் உள்ளனர்.
ஆனால் இந்தியாவில் இதெல்லாம் ஒரு கனவாகவே உள்ளது.மக்களின் அடிப்படைத் தேவையாகிய சுகாதாரத்துறையிலும் கல்வித்துறையிலும் அரசு தனது கடமையை படிப்படியாக குறைத்துக் கொண்டே வந்ததன் விளைவு சேவைத்துறைகள் அனைத்தும் இன்று லாப - நட்டம் பார்க்கும் துறைகளாக மாறியுள்ளன. கல்வித்துறையும் சுகாதாரத் துறையும் அரசின் வசம் இருந்தால்தான் இத்தகைய கொள்ளைகளை ஒழிக்கமுடியும், மக்களின்நலன்களைப் பாதுகாக்க முடியும்.
No comments:
Post a Comment