எம்.பி.பி.எஸ்.: 2,172 இடங்களுக்கும் எம்.சி.ஐ. அனுமதி கிடைத்து விடும்
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டுக்கு உரிய அனைத்து 2,172 எம்.பி.பி.எஸ். இடங்களிலும் மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சிலின் (எம்.சி.ஐ.) அனுமதி கிடைத்து விடும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களிடையே கடும் கட்-ஆஃப் மதிப்பெண்
போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு இருந்த எம்.பி.பி.எஸ். இடங்களில் எண்ணிக்கை குறைந்தால் இடம் கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சம் பெற்றோரிடம் எழுந்துள்ளது.
410 கூடுதல் இடங்கள்: சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கான முயற்சியை தொடர்ந்து சுகாதாரத் துறை உயர் அதிகாரிகளும் மருத்துவக் கல்வி அதிகாரிகளும் எடுத்து வருகின்றனர். சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி உள்பட பல கல்லூரிகளில் கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கடந்த கல்வி ஆண்டில் (2013-14) இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்தது. மேலும் திருவண்ணாமலையில் கடந்த கல்வி ஆண்டில் 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் தொடங்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிக்கும் எம்.சி.ஐ. ஒப்புதல் அளித்து அது செயல்பட்டு வருகிறது. அதாவது கடந்த கல்வி ஆண்டில் (2013-14) அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 410 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்தது.
புதுப்பித்தல் நடைமுறை என்ன? ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டால் தொடர்ந்து 5 ஆண்டுகள் வரை அந்த மருத்துவக் கல்லூரியை ஆய்வு செய்து புதுப்பிக்கும் நடைமுறையை இந்திய மருத்துவக் கவுன்சில் வகுத்துள்ளது. இதே நடைமுறை கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்கள் அனுமதிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கும் பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்கள் குறித்து இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் ஆய்வு செய்து சில குறைபாடுகளைச் சுட்டிக் காண்பித்துள்ளனர். இதே போன்று திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியையும் இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு (ஜூன் 18) தொடங்குவதற்குள்ளும் அதன் பிறகும் படிப்படியாக கடந்த கல்வி ஆண்டைப் போலவே மேலே குறிப்பிட்ட கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கும் இந்தக் கல்வி ஆண்டிலும் இந்திய மருத்துவக் கவுன்சிலின் அனுமதி கிடைத்து விடும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய அனைத்து 2,172 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும் அனுமதி கிடைத்து விடும் என்று சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி...: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி ஜூன் 25-ஆம் தேதிக்குள் எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வை முடிக்க வேண்டும். எனவே தரவரிசைப் பட்டியலை ஜூன் 12-ஆம் தேதி முதல் ஜூன் 16-ஆம் தேதிக்குள் வெளியிட்டு, ஏற்கெனவே அறிவித்தபடி ஜூன் 18-ஆம் தேதியன்று எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு தொடங்கும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவையில் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி
கோயம்புத்தூரிலும் நடப்புக் கல்வி ஆண்டில் மத்திய தொழிலாளர் நலத் துறை சார்பில் 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி செயல்படத் தொடங்கும் எனத் தெரிகிறது.
சென்னை கே.கே. நகரில் கடந்த கல்வி ஆண்டில் (2013-14) 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரி அரசு ஒதுக்கீட்டுக்கு 65 எம்.பி.பி.எஸ். இடங்களைச் சமர்ப்பித்து ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ.24,000-த்தை நிர்ணயித்துள்ளது.
இதே போன்று கோயம்புத்தூரில் 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் தொடங்கப்பட உள்ள இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரியை (தொழிலாளர் ஈட்டுறுதி நிறுவன மருத்துவக் கல்லூரி) இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து முடித்துள்ளனர். இந்தக் கல்லூரிக்கு நடப்புக் கல்வி ஆண்டில் (2014-15) அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், இந்த மருத்துவக் கல்லூரி மூலம் அரசு ஒதுக்கீட்டுக்கு 65 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டுக்கு உரிய அனைத்து 2,172 எம்.பி.பி.எஸ். இடங்களிலும் மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சிலின் (எம்.சி.ஐ.) அனுமதி கிடைத்து விடும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களிடையே கடும் கட்-ஆஃப் மதிப்பெண்
போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு இருந்த எம்.பி.பி.எஸ். இடங்களில் எண்ணிக்கை குறைந்தால் இடம் கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சம் பெற்றோரிடம் எழுந்துள்ளது.
410 கூடுதல் இடங்கள்: சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கான முயற்சியை தொடர்ந்து சுகாதாரத் துறை உயர் அதிகாரிகளும் மருத்துவக் கல்வி அதிகாரிகளும் எடுத்து வருகின்றனர். சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி உள்பட பல கல்லூரிகளில் கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கடந்த கல்வி ஆண்டில் (2013-14) இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்தது. மேலும் திருவண்ணாமலையில் கடந்த கல்வி ஆண்டில் 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் தொடங்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிக்கும் எம்.சி.ஐ. ஒப்புதல் அளித்து அது செயல்பட்டு வருகிறது. அதாவது கடந்த கல்வி ஆண்டில் (2013-14) அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 410 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்தது.
புதுப்பித்தல் நடைமுறை என்ன? ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டால் தொடர்ந்து 5 ஆண்டுகள் வரை அந்த மருத்துவக் கல்லூரியை ஆய்வு செய்து புதுப்பிக்கும் நடைமுறையை இந்திய மருத்துவக் கவுன்சில் வகுத்துள்ளது. இதே நடைமுறை கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்கள் அனுமதிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கும் பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்கள் குறித்து இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் ஆய்வு செய்து சில குறைபாடுகளைச் சுட்டிக் காண்பித்துள்ளனர். இதே போன்று திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியையும் இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு (ஜூன் 18) தொடங்குவதற்குள்ளும் அதன் பிறகும் படிப்படியாக கடந்த கல்வி ஆண்டைப் போலவே மேலே குறிப்பிட்ட கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கும் இந்தக் கல்வி ஆண்டிலும் இந்திய மருத்துவக் கவுன்சிலின் அனுமதி கிடைத்து விடும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய அனைத்து 2,172 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும் அனுமதி கிடைத்து விடும் என்று சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி...: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி ஜூன் 25-ஆம் தேதிக்குள் எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வை முடிக்க வேண்டும். எனவே தரவரிசைப் பட்டியலை ஜூன் 12-ஆம் தேதி முதல் ஜூன் 16-ஆம் தேதிக்குள் வெளியிட்டு, ஏற்கெனவே அறிவித்தபடி ஜூன் 18-ஆம் தேதியன்று எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு தொடங்கும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவையில் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி
கோயம்புத்தூரிலும் நடப்புக் கல்வி ஆண்டில் மத்திய தொழிலாளர் நலத் துறை சார்பில் 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி செயல்படத் தொடங்கும் எனத் தெரிகிறது.
சென்னை கே.கே. நகரில் கடந்த கல்வி ஆண்டில் (2013-14) 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரி அரசு ஒதுக்கீட்டுக்கு 65 எம்.பி.பி.எஸ். இடங்களைச் சமர்ப்பித்து ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ.24,000-த்தை நிர்ணயித்துள்ளது.
இதே போன்று கோயம்புத்தூரில் 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் தொடங்கப்பட உள்ள இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரியை (தொழிலாளர் ஈட்டுறுதி நிறுவன மருத்துவக் கல்லூரி) இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து முடித்துள்ளனர். இந்தக் கல்லூரிக்கு நடப்புக் கல்வி ஆண்டில் (2014-15) அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், இந்த மருத்துவக் கல்லூரி மூலம் அரசு ஒதுக்கீட்டுக்கு 65 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment