Saturday, June 14, 2014

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் (பி.இ.) படிப்புக்கு ரேண்டம் எண் ஜூன் 16 ஆம் தேதியும், மருத்துவம் (எம்.பி.பி.எஸ்.) மற்றும் பல் மருத்துவம் (பி.டி.எஸ்), வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளுக்கு ரேண்டம் எண்கள் ஜூன் 18ஆம் தேதியும் வெளியிடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2014-15ஆம் ஆண்டுக்கான மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பப் படிவம் கடந்த மே 9ஆம் தேதி முதலும், பி.எஸ்.சி. வேளாண்மை, பி.எஸ்.சி. தோட்டக்கலைப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் மே 12ஆம் தேதி முதலும் வழங்கப்பட்டன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் 11 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
÷அதன்படி, அண்ணாமலைப் பல்கலைக்கழக எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் சேர 7,651 பேரும் பி.எஸ்.சி. வேளாண்மை, பி.எஸ்.சி. தோட்டக்கலை படிப்புகளில் சேர 1,16,544 பேரும் பி.இ. படிப்பில் சேர 2,545 பேரும் மருந்தியல் (பி.பார்மசி) பி.பி.டி., பி.எஸ்.சி. நர்சிங் படிப்புகளில் சேர 947 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2014-15ஆம் கல்வி ஆண்டில் பி.இ. படிப்புக்கு 3 ஆயிரம் மாணவர்களும், பி.எஸ்.சி. வேளாண்மைப் படிப்புக்கு ஆயிரம் மாணவர்களும், பி.எஸ்.சி. தோட்டக்கலை படிப்புக்கு 75 மாணவர்களும் சேர்க்கப்படுவார்கள் என பல்கலை. நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்துள்ளார்.
ரேண்டம் எண்கள் நாளை வெளியீடு: பொறியியல் படிப்பிற்கு ரேண்டம் எண் ஜூன் 16ஆம் தேதியும், மருத்துவம் மற்றும் பல் மருத்துவம், வேளாண்மை, தோட்டக்கலை ஆகிய படிப்புகளுக்கு ஜூன் 18ஆம் தேதியும் ரேண்டம் எண்கள் வெளியிடப்படவுள்ளன.
அனுமதி சேர்க்கை முற்றிலும் தகுதி அடிப்படையிலும், அரசு விதிமுறைகள் இடஒதுக்கீடு முறையிலும் நடைபெறுகிறது.
மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தலைமை நிர்வாக அலுவலகத்தில் நடைபெறும். கலந்தாய்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்படும்.
ரேண்டம் எண் குறித்த விவரங்களை பல்கலைக்கழக இணையதளம் www.annamalaiauniversity.ac.in என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேலும் உதவி மைய தொலைபேசி எண்கள் 04144-238348, 238349.

No comments:

Post a Comment