பொறியியல் கல்லூரிகளின் தரம் வீழ்ச்சி தேர்ச்சியில் ஒற்றை இலக்கத்தை தாண்டாத கல்லூரிகள்
அதிர்ச்சியில் பெற்றோர்
தமிழகத்தில் கல்வி தொடர்ந்து வியாபாரமாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் ஈசல் புற்றிலிருந்து ஈசல்கள் கிளம்பி வெளிவருதைப் போல பொறியியல் கல்லூரிகள் பக்கம் பக்கமாக கலர் விளம்பரங்கள் செய்து, ஊடகங்களில் பெரிய பெரிய கட்டிடங்களைக் காட்டி விளம்பரம் செய்து வெளிவருகின்றன.அதுவும் 2014-2015ம் கல்வியாண்டில் பொறியியல் கல்லூரியில் விண்ணப்பித்த அனைவருக்கும் சீட் உண்டு என அண்ணா பல்கலைக்கழகம் பெருமையோடு கூறிக்கொள்கிறது.
ஒவ்வொரு பெற்றோரும் தனது மகனும், தனது மகளும் பொறியியல் வல்லுநராக வரவேண்டும். மற்றவர்கள் மெச்சத்தக்க அளவிற்கு சம்பளம் பெறவேண்டும் என ஆசையோடு நிலத்தில் தொடங்கி தனது மனைவியின் காதில் கிடக்கும் குண்டுமணி அளவு தங்கம் வரை அடகு வைத்து கல்லூரிகளில் சேர்த்துவிடுகின்றனர். ஒரு மாணவர் நான்காண்டு பொறியியல் கல்வி முடித்து வெளியே வருவதற்கு பல லட்சங்கள் செலவாகிறது.லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் பொறியியல் கல்லூரிகளின் தரம் எப்படி உள்ளது. ஒவ்வொரு பொறியியல் கல்லூரியிலும் எத்தனை மாணவர்கள் தேர்வெழுதினார்கள். எத்தனை பேர் தேர்ச்சி பெற்றார்கள். தேர்ச்சி சதவீதம் எவ்வளவு என்பதை அண்ணா பல்கலைக்கழம் அம்பலப்படுத்திவிட்டது.
அண்ணா பல்கலைக்கழகம் 2012 நவம்பர்-டிசம்பர், 2013 ஏப்ரல்-மே, 2013-நவம்பர்-டிசம்பர் மாத பல்கலைக்கழக தேர்வுகளில் உறுப்புக் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகிதப்பட்டியலை வெளியிட்டுள்ளது 2012 நவம்பர்-டிசம்பரில் 496 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர். இதில் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியிலிருந்து 4,463 பேர் தேர்வெழுதியுள்ளனர். மிகக்குறைவாக திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றிலிருந்து ஒரு மாணவர் தேர்வெழுதியுள்ளார்.மொத்தமுள்ள 496 கல்லூரிகளில் ஒரு கல்லூரி கூட 100 சதவீத தேர்ச்சியை எட்டிப்பிடிக்கவில்லை. அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படிக்கும் மாணவர்களில் 88.34 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஒப்பீட்டளவில் 70.11 சதவீதத்திலிருந்து 79.93 சதவீதம் வரை -31, கல்லூரிகள் 60.21 சதவீதத்திலிருந்து 69.46 சதவீதம் வரை-68 கல்லூரிகள், 50.06 சதவீதத்திலிருந்து 59.93 சதவீதம் வரை- 71 கல்லூரிகள், 40.20 சதவீதத்திலிருந்து 49.94 சதவீதம் வரை- 89 கல்லூரிகள், 30.17 சதவீதத்திலிருந்து 39.93 சதவீதம் வரை-84 கல்லூரிகள், 20 சதவீதத்திலிருந்து 29.94 சதவீதம் வரை-64 கல்லூரிகள், 10.64 சதவீதத்திலிருந்து 19.94 சதவீதம் வரை-57 கல்லூரிகள், 2.94 சதவீதத்திலிருந்து 9.89 சதவீதம் வரை- 16 கல்லூரிகள் என்ற அளவிலேயே தேர்ச்சி விகிதம் உள்ளது.2013 ஏப்ரல்-மே நடைபெற்ற தேர்வில் 20.8 சதவீதத்திலிருந்து 35.87 சதவீதம் வரை-76, 1.82 சதவீதத்திலிருந்து 19.80 சதவீதம் வரை 27 கல்லூரிகள் பெற்றுள்ளன.
இந்தக் காலத்தில் தஞ்சாவூரில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 390 பேரில் 40 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இன்னும் மோசமான தேர்ச்சிவிகிதமும் உள்ளது.ஈரோட்டில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 120 பேரில் 11 பேரும், திருவண்ணாமலையில் உள்ள கல்லூரியில் தேர்வெழுதிய 173 பேரில் 15 பேரும், அரியலூரில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 396 பேரில் 34 பேரும், சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 46 பேரில் 3 பேரும், வேலூரில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 236 பேரில் 13 பேரும், தஞ்சாவூரில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 143 பேரில் 4 பேரும், விழுப்புரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 55 பேரில் ஒரே ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் ஒரே ஒரு மாணவர் மட்டும் தேர்வெழுதி தோல்வியை தழுவியுள்ளார்.
அதிர்ச்சியில் பெற்றோர்
2013 நவம்பர்-டிசம்பரில் நடைபெற்ற தேர்வில் 10.10 சதவீதத்திலிருந்து 18.55 சதவீதம் வரை-46, 1.82 சதவீதத்திலிருந்து 9.65 சதவீதம் வரை-19 கல்லூரிகளும் தேர்ச்சி பெற்றுள்ளன.இந்தக் காலத்தில் சிவகங்கையில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 515 பேரில் 32 பேரும், மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 532 பேரில் 57 பேரும், தேனியில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 323 பேரில் 42 பேரும், திண்டுக்கல்லில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 341 பேரில் 60 பேரும், இராமநாதபுரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 581 பேரில் 45 பேர் என்ற அளவிலேயே தேர்ச்சி விகிதம் உள்ளது.
முட்டையில் சாதனை
விழுப்புரத்தில் உள்ள மற்றொருகல்லூரியில் தேர்வெழுதிய 140பேரில் ஒருவர் கூட வெற்றிபெறவில்லை.
ஒற்றை இலக்கத்தை தாண்டாத கல்லூரிகள்
தேர்ச்சி விகிதத்தில் (மூன்று கட்டங்களாக நடைபெற்ற தேர்வில்) 42 கல்லூரிகள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் பெற்றோர்களையும் கல்வியாளர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.70 சதவீதத்திலிருந்து 90 சதவீத தேர்ச்சியை சுமார் 90 கல்லூரிகளேபெற்றுள்ளன. இவ்விவரங்களைhttp://www.annauniv.edu/ இணையதளத்தில் வெளியான தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன
அதிர்ச்சியில் பெற்றோர்
தமிழகத்தில் கல்வி தொடர்ந்து வியாபாரமாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் ஈசல் புற்றிலிருந்து ஈசல்கள் கிளம்பி வெளிவருதைப் போல பொறியியல் கல்லூரிகள் பக்கம் பக்கமாக கலர் விளம்பரங்கள் செய்து, ஊடகங்களில் பெரிய பெரிய கட்டிடங்களைக் காட்டி விளம்பரம் செய்து வெளிவருகின்றன.அதுவும் 2014-2015ம் கல்வியாண்டில் பொறியியல் கல்லூரியில் விண்ணப்பித்த அனைவருக்கும் சீட் உண்டு என அண்ணா பல்கலைக்கழகம் பெருமையோடு கூறிக்கொள்கிறது.
ஒவ்வொரு பெற்றோரும் தனது மகனும், தனது மகளும் பொறியியல் வல்லுநராக வரவேண்டும். மற்றவர்கள் மெச்சத்தக்க அளவிற்கு சம்பளம் பெறவேண்டும் என ஆசையோடு நிலத்தில் தொடங்கி தனது மனைவியின் காதில் கிடக்கும் குண்டுமணி அளவு தங்கம் வரை அடகு வைத்து கல்லூரிகளில் சேர்த்துவிடுகின்றனர். ஒரு மாணவர் நான்காண்டு பொறியியல் கல்வி முடித்து வெளியே வருவதற்கு பல லட்சங்கள் செலவாகிறது.லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் பொறியியல் கல்லூரிகளின் தரம் எப்படி உள்ளது. ஒவ்வொரு பொறியியல் கல்லூரியிலும் எத்தனை மாணவர்கள் தேர்வெழுதினார்கள். எத்தனை பேர் தேர்ச்சி பெற்றார்கள். தேர்ச்சி சதவீதம் எவ்வளவு என்பதை அண்ணா பல்கலைக்கழம் அம்பலப்படுத்திவிட்டது.
அண்ணா பல்கலைக்கழகம் 2012 நவம்பர்-டிசம்பர், 2013 ஏப்ரல்-மே, 2013-நவம்பர்-டிசம்பர் மாத பல்கலைக்கழக தேர்வுகளில் உறுப்புக் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகிதப்பட்டியலை வெளியிட்டுள்ளது 2012 நவம்பர்-டிசம்பரில் 496 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர். இதில் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியிலிருந்து 4,463 பேர் தேர்வெழுதியுள்ளனர். மிகக்குறைவாக திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றிலிருந்து ஒரு மாணவர் தேர்வெழுதியுள்ளார்.மொத்தமுள்ள 496 கல்லூரிகளில் ஒரு கல்லூரி கூட 100 சதவீத தேர்ச்சியை எட்டிப்பிடிக்கவில்லை. அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படிக்கும் மாணவர்களில் 88.34 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஒப்பீட்டளவில் 70.11 சதவீதத்திலிருந்து 79.93 சதவீதம் வரை -31, கல்லூரிகள் 60.21 சதவீதத்திலிருந்து 69.46 சதவீதம் வரை-68 கல்லூரிகள், 50.06 சதவீதத்திலிருந்து 59.93 சதவீதம் வரை- 71 கல்லூரிகள், 40.20 சதவீதத்திலிருந்து 49.94 சதவீதம் வரை- 89 கல்லூரிகள், 30.17 சதவீதத்திலிருந்து 39.93 சதவீதம் வரை-84 கல்லூரிகள், 20 சதவீதத்திலிருந்து 29.94 சதவீதம் வரை-64 கல்லூரிகள், 10.64 சதவீதத்திலிருந்து 19.94 சதவீதம் வரை-57 கல்லூரிகள், 2.94 சதவீதத்திலிருந்து 9.89 சதவீதம் வரை- 16 கல்லூரிகள் என்ற அளவிலேயே தேர்ச்சி விகிதம் உள்ளது.2013 ஏப்ரல்-மே நடைபெற்ற தேர்வில் 20.8 சதவீதத்திலிருந்து 35.87 சதவீதம் வரை-76, 1.82 சதவீதத்திலிருந்து 19.80 சதவீதம் வரை 27 கல்லூரிகள் பெற்றுள்ளன.
இந்தக் காலத்தில் தஞ்சாவூரில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 390 பேரில் 40 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இன்னும் மோசமான தேர்ச்சிவிகிதமும் உள்ளது.ஈரோட்டில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 120 பேரில் 11 பேரும், திருவண்ணாமலையில் உள்ள கல்லூரியில் தேர்வெழுதிய 173 பேரில் 15 பேரும், அரியலூரில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 396 பேரில் 34 பேரும், சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 46 பேரில் 3 பேரும், வேலூரில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 236 பேரில் 13 பேரும், தஞ்சாவூரில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 143 பேரில் 4 பேரும், விழுப்புரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 55 பேரில் ஒரே ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் ஒரே ஒரு மாணவர் மட்டும் தேர்வெழுதி தோல்வியை தழுவியுள்ளார்.
அதிர்ச்சியில் பெற்றோர்
2013 நவம்பர்-டிசம்பரில் நடைபெற்ற தேர்வில் 10.10 சதவீதத்திலிருந்து 18.55 சதவீதம் வரை-46, 1.82 சதவீதத்திலிருந்து 9.65 சதவீதம் வரை-19 கல்லூரிகளும் தேர்ச்சி பெற்றுள்ளன.இந்தக் காலத்தில் சிவகங்கையில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 515 பேரில் 32 பேரும், மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 532 பேரில் 57 பேரும், தேனியில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 323 பேரில் 42 பேரும், திண்டுக்கல்லில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 341 பேரில் 60 பேரும், இராமநாதபுரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 581 பேரில் 45 பேர் என்ற அளவிலேயே தேர்ச்சி விகிதம் உள்ளது.
முட்டையில் சாதனை
விழுப்புரத்தில் உள்ள மற்றொருகல்லூரியில் தேர்வெழுதிய 140பேரில் ஒருவர் கூட வெற்றிபெறவில்லை.
ஒற்றை இலக்கத்தை தாண்டாத கல்லூரிகள்
தேர்ச்சி விகிதத்தில் (மூன்று கட்டங்களாக நடைபெற்ற தேர்வில்) 42 கல்லூரிகள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் பெற்றோர்களையும் கல்வியாளர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.70 சதவீதத்திலிருந்து 90 சதவீத தேர்ச்சியை சுமார் 90 கல்லூரிகளேபெற்றுள்ளன. இவ்விவரங்களைhttp://www.annauniv.edu/ இணையதளத்தில் வெளியான தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன
No comments:
Post a Comment