எம்.பி.பி.எஸ். படிப்புக்கு 18-ந் தேதி கலந்தாய்வு: மருத்துவ கல்வி இயக்குனர் தகவல்
தமிழ்நாட்டில் சென்னை அரசு மருத்துவக்கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி, மதுரை அரசு மருத்துவக்கல்லூரி, தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி, கோவை அரசு மருத்துவக்கல்லூரி, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி என்பது உள்பட 19 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன.
இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு 2 ஆயிரத்து 555 இடங்கள் உள்ளன. பிளஸ்-2 தேர்வில் மாணவ-மாணவிகள் உயிரியல், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும், இடஒதுக்கீடு அடிப்படையிலும் இந்த இடங்களில் சேர்க்கப்படுவார்கள்.
இதற்கான மாணவர்கள் சேர்க்கையை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்குனரகம் மேற்கொண்டு வருகிறது. எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ படிப்பான பி.டி.எஸ். வகுப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு விண்ணப்ப படிவங்கள் தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் வழங்கப்பட்டன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்வி இயக்குனரகத்திற்கு வந்துசேர நேற்று கடைசி நாள் ஆகும்.
இதுவரை 30 ஆயிரத்து 380 விண்ணப்ப படிவங்கள் விற்பனை ஆகியுள்ளன. அதில், 27 ஆயிரத்து 876 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன. மேலும் சில விண்ணப்பங்களும் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பித்த மாணவ- மாணவிகள் அனைவருக்கும் தரவரிசை பட்டியல் (ரேங்க்) 12-ந் தேதி வழங்கப்படும். அதைத் தொடர்ந்து தகுதியான மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு 18-ந் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும். பிளஸ்-2 முடித்த மாணவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிந்துவிட்டால், மேற்கண்ட தேதிகளில் திட்டமிட்டப்படி, தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு நடைபெறும்.
இந்த தகவலை மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் கீதா லட்சுமி தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் சென்னை அரசு மருத்துவக்கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி, மதுரை அரசு மருத்துவக்கல்லூரி, தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி, கோவை அரசு மருத்துவக்கல்லூரி, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி என்பது உள்பட 19 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன.
இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு 2 ஆயிரத்து 555 இடங்கள் உள்ளன. பிளஸ்-2 தேர்வில் மாணவ-மாணவிகள் உயிரியல், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும், இடஒதுக்கீடு அடிப்படையிலும் இந்த இடங்களில் சேர்க்கப்படுவார்கள்.
இதற்கான மாணவர்கள் சேர்க்கையை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்குனரகம் மேற்கொண்டு வருகிறது. எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ படிப்பான பி.டி.எஸ். வகுப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு விண்ணப்ப படிவங்கள் தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் வழங்கப்பட்டன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்வி இயக்குனரகத்திற்கு வந்துசேர நேற்று கடைசி நாள் ஆகும்.
இதுவரை 30 ஆயிரத்து 380 விண்ணப்ப படிவங்கள் விற்பனை ஆகியுள்ளன. அதில், 27 ஆயிரத்து 876 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன. மேலும் சில விண்ணப்பங்களும் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பித்த மாணவ- மாணவிகள் அனைவருக்கும் தரவரிசை பட்டியல் (ரேங்க்) 12-ந் தேதி வழங்கப்படும். அதைத் தொடர்ந்து தகுதியான மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு 18-ந் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும். பிளஸ்-2 முடித்த மாணவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிந்துவிட்டால், மேற்கண்ட தேதிகளில் திட்டமிட்டப்படி, தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு நடைபெறும்.
இந்த தகவலை மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் கீதா லட்சுமி தெரிவித்தார்.
No comments:
Post a Comment