Sunday, June 1, 2014

ஜிப்மர் நுழைவுத் தேர்வு வரும் 8ம் தேதி நடக்கிறது

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு, வரும் 8ம் தேதி நடக்கிறது. இத்தேர்வினை, 93 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இதில், பொதுப் பிரிவு 50 இடங்கள், ஓ.பி.சி.,28, பழங்குடியினர்11 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. புதுச்சேரி மாணவர்களுக்கு பொதுப் பிரிவு23, ஓ.பி.சி.,11, எஸ்.சி., 6 இடங்கள் என மொத்தம் 40 இடங்கள் ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, கடந்த மாதம் 2ம் தேதி வரை ஜிப்மர் இணையதளத்தில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டது. 93 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் 36 நகரங்களில், வரும் 8ம் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, ஆன் லைன் மூலம் நடக்கிறது. கடந்த 20ம் தேதி வரை ஹால் டிக்கெட் வழங்கப் பட்டது. இதுவரை ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள், நாளை 2 ம் தேதி வரை புதுப்பிக்கப்பட்ட ஹால் டிக்கெட்டினை டவுன்லோடு செய்து கொள்ளலாம் என, அறிவிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment