Thursday, June 9, 2016

இ.எஸ்.ஐ., கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு அனுமதி

இ.எஸ்.ஐ.மருத்துவக் கல்லுாரியில்நடப்பு ஆண்டில், 100எம்.பி.பி.எஸ்.இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்தஇந்திய மருத்துவக் கவுன்சிலானஎம்.சி.ஐ.அனுமதி அளித்துள்ளது. இதனால்,அரசு மருத்துவக் கல்லுாரிகளின் எண்ணிக்கை, 21 ஆகவும்;எம்.பி.பி.எஸ்.இடங்களின் எண்ணிக்கை, 2,760 ஆகவும் உயர்ந்துள்ளன.

கோவையில், 520 கோடி ரூபாய் செலவில்இ.எஸ்.ஐ.மருத்துவக் கல்லுாரி அமைக்கப்பட்டது. இதை,ஜனவரியில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இ.எஸ்.ஐ.மருத்துவக் கல்லுாரிகளை நடத்த முடியாமல் திணறி வரும் மத்திய தொழிலாளர் நலத்துறை,கோவை மருத்துவக் கல்லுாரியைதமிழக அரசிடம் ஒப்படைத்தது. இந்த கல்லுாரியில்மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கோரிதமிழக அரசு முறையாக விண்ணப்பித்தது.
ஆய்வு செய்தஎம்.சி.ஐ.பல குறைபாடுகளை சுட்டிக்காட்டிஅனுமதி தர மறுத்தது. குறைபாடுகள் சரி செய்யப்பட்ட நிலையில்நடப்பு கல்வி ஆண்டில், 100 எம்.பி.பி.எஸ்.இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்த,எம்.சி.ஐ.அனுமதி அளித்துள்ளது.
இது குறித்துமருத்துவக் கல்வி இயக்குனர் விமலா கூறியதாவது:
கோவை மருத்துவக் கல்லுாரியில்எம்.பி.பி.எஸ்.படிப்பில், 100 மாணவர்களைச் சேர்க்கஎம்.சி.ஐ.அனுமதி அளித்து உள்ளது. இதில், 15 சதவீதம்அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும்; 65 இடங்கள் மாநில ஒதுக்கீட்டிற்கும்; 20 இடங்கள்இ.எஸ்.ஐ.தொழிலாளர் வாரிசுகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. முதற்கட்ட கலந்தாய்வில் இந்த இடங்கள் சேர்க்கப்பட்டுமாணவர் சேர்க்கை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
21வது அரசு கல்லுாரி
தமிழகத்தில்கடந்த கல்வி ஆண்டில் அனுமதி பெற்றஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரி உட்பட, 20அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. கோவைஇ.எஸ்.ஐ.மருத்துவக் கல்லுாரிக்கு அனுமதி கிடைத்துள்ளதால்அரசு மருத்துவக் கல்லுாரிகளின் எண்ணிக்கை, 21 ஆக உயர்கிறது.
ஏற்கனவே, 20 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 2,665 எம்.பி.பி.எஸ்.இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில், 155 இடங்களில்ஐந்து இடங்களை இந்த ஆண்டுஎம்.சி.ஐ.,குறைத்ததால் மொத்தம், 2,660 இடங்கள் உள்ளன. கோவை கல்லுாரியின், 100 இடங்களையும் சேர்த்தால்,அரசு கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்.இடங்கள் எண்ணிக்கை, 2,760 ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment