தேசிய உயர்கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி.,ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நாளை மறுநாள் துவங்குகிறது.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - ஐ.எஸ்.எம்., ஆகியவற்றில் சேர, ஜே.இ.இ.,அட்வான்ஸ்ட் என்ற இரண்டு ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். ஐ.ஐ.ஐ.டி.,மற்றும் என்.ஐ.டி., போன்றவற்றில் சேர, ஜே.இ.இ., பிரதான தேர்வில் மட்டும் தேர்ச்சி பெற்றால் போதும்.
இந்த ஆண்டு, ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் தேர்வுக்கான முடிவுகளும், தரவரிசையும் ஏற்கனவே வெளியான நிலையில், ஜே.இ.இ., பிரதான தேர்வுக்கான தரவரிசை, நாளை வெளியிடப்படுகிறது. இதையடுத்து, நாளை மறுநாள் முதல், தேசிய கல்வி நிறுவனங்களுக்கான, ஆன்லைன் கவுன்சிலிங் துவங்க உள்ளது. ஜூலை4ம் தேதி வரை, நான்கு கட்டங்களாக நடக்கிறது
No comments:
Post a Comment