Monday, May 2, 2016

திட்டமிட்டபடி நடந்தது பொது மருத்துவ நுழைவு தேர்வு!

திட்டமிட்டபடி, நேற்று நடந்த, அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத் தேர்வில், தமிழகத்தில், 26 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

தமிழகத்தில்எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.படிப்புகளில்மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்குபிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடந்து வருகிறது. மத்திய ஒதுக்கீட்டு இடங்களுக்குஅகில இந்திய அளவில்,பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில்மாநில இடங்களுக்கும் சேர்த்துமே, 1 மற்றும் ஜூலை, 24ல் அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தஉச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில்மத்திய இடைநிலை கல்வி வாரியமானசி.பி.எஸ்.இ.ஏற்கனவே அறிவித்தபடிஅகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பித் தோருக்குநேற்றுபொது நுழைவுத் தேர்வை நடத்தியது. தமிழகத்தில்சென்னை உள்ளிட்ட, 39மையங்களில் நடந்ததேர்வில், 26 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
தேர்வு மையங்களில்பேனா தரப்பட்டது. வெளியில் இருந்துதண்ணீர் பாட்டில்பேனா,கால்கு லேட்டர் எனஎந்த பொருட்களும் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. கம்மல்மூக்குத்திவளையலுக்கு அனுமதி இல்லை என்பதால்மாணவியர் அவற்றை தங்கள் பெற்றோரிடம் கழற்றிக் கொடுத்து சென்றனர்.
டி.எம்.இ.அலுவலகம் முற்றுகை: மருத்துவ மாணவர் சேர்க்கைக்குஅகில இந்திய அளவிலான பொது நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்புதெரிவித்துசமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தினர்சென்னையில் உள்ளடி.எம்.இ.அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இது குறித்துசங்க பொதுச் செயலர் ரவீந்தரநாத் கூறியதாவது:
தமிழக அரசின், 2006 சட்டத்தின் மூலம்பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுபிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில்மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதற்குஜனாபதி ஒப்புதல் பெறப்பட்டுசட்ட ரீதியான பாதுகாப்பும் உள்ளது. 
தேசிய அளவில் நுழைவுத் தேர்வு கட்டாயம் எனஉச்ச நீதிமன்றம் கூறுவதுமாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரானது. தமிழக மாணவர்களின் உரிமைகளை பாதுகாக்கபோர்க்கால அடிப்படையில்மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment