மே 22ம் தேதி நடத்த இருந்த மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு, ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது என, சென்னை ராமச்சந்திரா பல்கலை அறிவித்துள்ளது.
அந்த பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளதாவது: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, மே 22ம் தேதி நடக்க இருந்த நுழைவுத்தேர்வு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஒத்தி வைக்கப்படுகிறது.
துணை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வு, மே 29ம் தேதி நடக்கும். மேலும் விவரங்களைwww.sriramachandra.edu.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம், என அறிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment