Wednesday, August 6, 2014

இன்ஜினியரிங் படிப்பு ஆர்வம் குறைந்தது - பொறியியல் கல்லூரிகளில் 1.2 லட்சம் இடங்கள் காலி

இன்ஜினியரிங் படிப்புக்கான முதல்கட்ட கவுன்சலிங் முடிந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சுமார் 1 லட்சத்து 2 ஆயிரம் சீட்டுகள் காலியாக உள்ளன. இந்நிலையில் துணை கவுன்சலிங் இன்று தொடங்குகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள 538 பொறியியல் கல்லூரிகளில், இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டின் கீழ் 2 லட்சத்து 11 ஆயிரத்து 589 இடங்கள் இருந்தன. இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு 1 லட்சத்து 73,687 பேர் விண்ணப்பித்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜூலை 7ம் தேதி பொதுப் பிரிவு மாணவர்களுக்கு கவுன்சலிங் துவங்கியது. நாள்தோறும் சராசரியாக 4 ஆயிரத்து 400 மாணவ, மாணவிகள் கவுன்சலிங்கிற்கு அழைக்கப்பட்டனர். ஜூலை 7ம் தேதி தொடங்கி கடந்த 4ம் தேதி வரை 28 நாள்கள் நடைபெற்ற கவுன்சலிங்கில், 1 லட்சத்து 64 ஆயிரத்து 929 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். இதில், அனைத்து பிரிவுகளும் சேர்த்து 1 லட்சத்து 9 ஆயிரத்து 79 மாணவ, மாணவிகள் இடங்களை தேர்வு செய்தனர். 59 ஆயிரத்து 300 மாணவர்கள் கவுன்சலிங்கில் பங்கேற்கவில்லை. 496 மாணவர்கள் இடம் வேண்டாம் என கூறி சென்றுள்ளனர்.
இந்தாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கையை பொறுத்தளவில், பல்வேறு பாடப்பிரிவுகளில் சுமார் 1 லட்சத்து 2 ஆயிரத்து 510 இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளன. இதனால், பல இன்ஜினியரிங் கல்லூரிகள் நிதி சுமையின் காரணமாக இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இன்ஜினியரிங் அட்மிஷனில் 80 ஆயிரம் சீட்கள் நிரம்பவில்லை. இந்த வருடம் இது மேலும் 20 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் போதிய ஆர்வம் காட்டாததே இதற்கு காரணம் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று கவுன்சலிங் நடைபெற உள்ளது. இதற்காக ஏராளமான மாணவர்கள் நேற்று அண்ணா பல்கலைக் கழகத்தில் நேரில் பதிவு செய்தனர். பொதுப் பிரிவில் கலந்துகொள்ள தவறிய மாணவர்களும், இந்த துணை கவுன்சலிங்கில் கலந்து கொள்ளலாம் என அண்ணா பல்கலைக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Saturday, August 2, 2014

சென்னை: தமிழகத்தில், அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும், பி.இ., முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று(ஆகஸ்ட் 1ம் தேதி) துவங்கின. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாகத்துடன் கல்லூரிகளுக்கு சென்றனர்.
"கல்லூரிகளில், ராகிங் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என அண்ணா பல்கலை தெரிவித்தது.
கடந்த ஜூன் இறுதியில் துவங்கிய, பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு, வரும் 4ம் தேதியுடன் முடிகிறது. அண்ணா பல்கலை நடத்திய கலந்தாய்வில் 90 ஆயிரம் மாணவர்கள் பி.இ., படிப்பில் சேர்ந்தனர். கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு மூலம், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கல்லூரிகளில் சேர்ந்தனர்.
"நாடு முழுவதும், பி.இ., முதலாம் ஆண்டு வகுப்புகள் ஆக., 1ம் தேதி துவங்க வேண்டும்" என்பது, ஏ.ஐ.சி.டி.இ., (அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு) உத்தரவு.
அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள 560 பொறியியல் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு வகுப்புகள், நேற்று துவங்கின. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாகத்துடன் கல்லூரிகளுக்கு சென்றனர்.
இது குறித்து, அண்ணா பல்கலை வட்டாரம் கூறியதாவது: முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ள மாணவர்கள் அனைவருக்கும், ஒரு மாதம் வரை, பல்வேறு பயிற்சி அளிக்கப்படும். பிளஸ் 2 பாடத் திட்டங்களுக்கும், பி.இ., பாடத் திட்டங்களுக்கும் உள்ள வேறுபாடுகள், பாடத்திட்டங்கள் விவரம், அவற்றை எந்த வகையில் எதிர்கொண்டு, சிறப்பாக படிக்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு தகவல்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
சிறப்பாக படித்து தேர்ச்சி பெற முடியும் என்ற நம்பிக்கையை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் பயிற்சி அமையும். ஒரு மாதத்திற்குப் பிறகே, பி.இ., பாடம் சார்ந்த வகுப்புகள் ஆரம்பிக்கும்.
கல்லூரிகளில், முதலாம் ஆண்டு மாணவர்களை ராகிங் செய்தால், சீனியர் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்த தகவல்களை மாணவர்கள் மத்தியில் தெரிவிக்கவும், தனியார் கல்லூரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். ராகிங் செய்தால், என்னென்ன தண்டனைகள் வழங்கப்படும் என்ற விவரங்களை கல்லூரி வளாகங்களில், ஆங்காங்கே, அறிவிப்பு பலகைகளாக வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அண்ணா பல்கலை வட்டாரம் தெரிவித்தது.

Wednesday, July 30, 2014

சென்னை: பொதுப்பிரிவு பொறியியல் கவுன்சிலிங்கில், இதுவரை ஒதுக்கீடு பெற்ற 81,083 பேரில், 47,103 பேர் ஆண்கள் மற்றும் 33,980 பேர் பெண்கள்.
மொத்த எண்ணிக்கையான 81,083 பேரில், முதல் தலைமுறை பட்டதாரிகள் மட்டும் 43,559 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு பாடப்பிரிவுகளையும் சேர்த்து, ஜுலை 28 நிலவரப்படியான பொறியியல் இடங்கள் 2,04,079.
இவற்றில், இதுவரை 39.73% இடங்கள் நிரம்பியுள்ளன. மாணவர்கள் அதிகம் தேர்வு செய்ததில், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் மற்றும் சிவில் இன்ஜினியரிங் ஆகிய பாடங்கள் முறையே, முதல் மூன்று இடங்களைப் பெறுகின்றன.
நான்காவது இடத்தில் கணிப்பொறி அறிவியல் பாடம் வருகிறது. ஐந்தாவது இடத்தில், எலக்ட்ரிகல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் படிப்பும், ஆறாவது இடத்தில் ஐ.டி. படிப்பும் வருகிறது.
முக்கியப் பாடங்கள் தவிர்த்த இதர பாடப்பிரிவுகளை இதுவரை மொத்தம் 5,106 பேர் தேர்வு செய்துள்ளனர். தமிழ் வழியில் வழங்கப்படும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் 147 பேரும், சிவில் படிப்பில் 187 பேரும் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
தமிழ் வழி சிவில் படிப்பை அதிகளவாக 111 பெண்கள் தேர்வு செய்துள்ளனர். அதேசமயம் மெக்கானிக்கல் படிப்பை 14 பெண்கள் மட்டுமே தேர்வு செய்துள்ளனர்.
சென்னை: கால்நடை மருத்துவம் தொடர்பான இளநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜுலை 30ம் தேதி காலை 9 மணிமுதல் சென்னையில் நடைபெறுகிறது. மொத்தம் 3 நாட்கள் இந்த கவுன்சிலிங் நடைபெறுகிறது.
ஜுலை 30ம் தேதி காலை 9 மணி முதல்,
BVSc & AH படிப்பில், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டுப் பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிள்ளைகள் ஆகியோருக்கான கவுன்சிலிங்
காலை 11 மணிமுதல்,
BVSc & AH படிப்பிற்கு, பள்ளிப் படிப்பில் தொழிற்பிரிவு படித்தவர்களுக்கான கவுன்சிலிங். மாணவர்களின் இனப்பிரிவு கட்-ஆப் மதிப்பெண் வாரியாக இந்த கவுன்சிலிங் நடைபெறுகிறது.
ஜுலை 31ம் தேதி
BVSc & AH படிப்புகளுக்கு, பள்ளி படிப்பில் அகடமிக் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங். இது முதல் batch கவுன்சிலிங் ஆகும். இங்கும், இனப்பிரிவுக்கேற்ற கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் கவுன்சிலிங் நடத்தப்படும்.
மதியம் 2 மணிமுதல் அதே அகடமிக் பிரிவு மாணவர்களுக்கு, BVSc & AH படிப்பிற்கான, இரண்டாம் batch கவுன்சிலிங் நடத்தப்படும்.
ஆகஸ்ட் 1ம் தேதி
காலை 9 மணிக்கு, பி.டெக்., உணவு தொழில்நுட்பம் மற்றும் பி.டெக்., கோழி வளர்ப்பு தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளில், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டுப் பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிள்ளைகள் ஆகியோருக்கான கவுன்சிலிங் நடைபெறும்.
அதே நாளில், காலை 11 மணிமுதல், மேற்கூறிய இரண்டு படிப்புகளுக்கும், பொதுப்பிரிவு கவுன்சிலிங் நடைபெறும்.
விரிவான விபரங்களை அறிய http://www.tanuvas.tn.nic.in/ugadmission/counselling.html.
பொறியியல் கலந்தாய்வு முடிவதற்கு வியாழக்கிழமையுடன் (ஜூலை 31) சேர்த்து 5 நாள்களே உள்ள நிலையில் 86 ஆயிரம் பேர் பல்வேறு பிரிவுகளைத் தேர்வு செய்துள்ளனர்.
இதில், அதிக மாணவர்கள் தேர்வு செய்துள்ள பிரிவுகளில் தொடர்ந்து மெக்கானிக்கல் பிரிவே முதலிடம் வகிக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு ஆகஸ்ட் 4-ஆம் தேதியோடு முடிவடையவுள்ளது.
கலந்தாய்வில் மொத்தமுள்ள 2,04,079 இடங்களில் 86,031 இடங்கள் மட்டுமே இதுவரை நிரம்பியுள்ளன.
கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட 1,27,858 பேரில், 41,485 மாணவ, மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்பதைத் தவிர்த்துள்ளனர்.
இதில், எப்போதும் இல்லாத அளவுக்கு புதன்கிழமை அதிகமானோர் கலந்தாய்வில் பங்கேற்பதைத் தவிர்த்துள்ளனர். மொத்தம் அழைக்கப்பட்ட 8,832 பேரில் 3,866 மாணவ, மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்பதைத் தவிர்த்துள்ளனர்.
இதுவரை இடங்களைத் தேர்வு செய்தவர்களில் 20,932 பேர் மெக்கானிக்கல் பிரிவைத் தேர்வு செய்துள்ளனர்.
இந்தப் பிரிவில் மொத்தம் 43,210 இடங்கள் இடம்பெற்றிருந்தன. இதற்கு அடுத்தபடியாக இசிஇ பிரிவில் மொத்தமுள்ள 41,484 இடங்களில் 16,388 இடங்கள் நிரம்பியுள்ளன.
இதுவரை நான்காம் இடத்தில் இருந்து வந்த சிவில் பிரிவு, மூன்றாம் இடத்துக்கு வந்துள்ளது. இந்தப் பிரிவில் உள்ள 28,674 இடங்களில் 13,203 இடங்கள் நிரம்பியுள்ளன. பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் மொத்தமுள்ள 32,614 இடங்களில் 11,319 இடங்கள் நிரம்பியுள்ளன.
பி.இ. தகவல் தொழில்நுட்பப் பிரிவில் 13,212 இடங்களில் வெறும் 4,399 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.
கலந்தாய்வு முடிய வியாழக்கிழமையோடு சேர்த்து இன்னும் 5 நாள்கள் உள்ளன என்பதால், முடிவில் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஒரு லட்சம் இடங்கள் காலியாக இருக்கும் நிலை உருவாகும் எனக் கல்லூரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tuesday, July 29, 2014

ஜூலை 7-இல் பி.இ. கலந்தாய்வு: எஸ்.எம்.எஸ். மூலம் மாணவர்களுக்கு தகவல்உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 7-ஆம் தேதி தொடங்குகிறது.

இதற்கான அறிவிப்பு மற்றும் மாற்றியமைக்கப்பட்ட புதிய கலந்தாய்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலிடம் (ஏஐசிடிஇ) நிலுவையில் உள்ள பொறியியல் கல்லூரி விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய ஒரு வாரகால அவகாசத்தை அளித்து உச்ச நீதிமன்றம் ஜூன் 26-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்த உத்தரவு காரணமாக ஜூன் 27-ஆம் தேதி தொடங்கவிருந்த பொதுப் பிரிவு கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது. இதனால் பாதிப்புக்கு ஆளான மாணவர்களும் பெற்றோரும், கலந்தாய்வு மறு தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.

இந் நிலையில், ஏஐசிடிஇ-யின் அனுமதி மற்றும் தமிழக அரசின் ஒப்புதலின் அடிப்படையில் ஜூலை 7-ஆம் தேதி முதல் பொதுப் பிரிவு கலந்தாய்வை தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

அதனடிப்படையில் பொதுப் பிரிவு கலந்தாய்வு புதிய கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் ஜ்ஜ்ஜ்.ஹய்ய்ஹன்ய்ண்ஸ்ற்ய்ங்ஹ2014 என்ற இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

சுற்றுகளின் எண்ணிக்கை உயர்வு: முன்னர் ஜூன் 27-ஆம் தேதி தொடங்கி ஜூலை 28-ஆம் தேதி வரை 32 நாள்கள் பொதுப் பிரிவு கலந்தாய்வு நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், இப்போது ஜூலை 7-இல் தொடங்கி ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை 29 நாள்கள் மட்டுமே நடத்தப்படுகிறது.

நாள்களின் எண்ணிக்கை குறைந்த காரணத்தால், ஒரு நாளுக்கான சுற்றுகளின் எண்ணிக்கை 8-லிருந்து 9-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், முதல் நாளான 7-ஆம் தேதி மட்டும் காலை 10 மணிக்கு கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது. இறுதிச் சுற்று இரவு 7 மணிக்கு தொடங்கும். அன்றைய தினம் கட்-ஆஃப் 200-க்கு 200 பெற்றவர்கள் முதல் குறைந்தபட்சம் 198.75 கட்-ஆஃப் பெற்றவர்கள் வரையில் 3 ஆயிரம் பேர் அளவுக்கு கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கலந்தாய்வின் இரண்டாம் நாளிலிருந்து முதல் சுற்று காலை 7 மணிக்குத் தொடங்கப்படும். பின்னர் 8.30, 10.00, 11.30, 1.00, 2.30, 4.00, 5.30, 7.00 மணி என 9 சுற்றுகளாக நடத்தப்பட உள்ளது.

கலந்தாய்வு மறு தேதி அறிவிப்பு குறித்த தகவல் விண்ணப்பித்துள்ள 1.70 லட்சம் மாணவ, மாணவிகளுக்கும் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 500 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அதாவது நாளொன்றுக்கு 5000 பேருக்கு பதிலாக 5,500 பேர் வீதம் கலந்து கொள்வர்.

மாணவர்கள் அவர்களுடைய சுற்று தொடங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னதாக கலந்தாய்வு வளாகத்துக்கு வந்துவிட வேண்டும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார்.



தொழில் பிரிவு மாணவர்களுக்கு... பிளஸ்-2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தேதியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இவர்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்ததுபோல் ஜூலை 9-ஆம் தேதி முதல் ஜூலை 18-ஆம் தேதி வரை 10 நாள்கள் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இவர்களுக்கான கலந்தாய்வு தேதி அட்டவணையும் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

Sunday, July 27, 2014

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பொறியியல் மாணவர் சேர்க்கையில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் சேருவதில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் மாணவர்களைச் சேர்ப்பதற்கான கவுன்சலிங்கின்போது, ரேங்கில் சிறப்பிடம் பெற்றுள்ள மாணவர்கள் கிண்டி பொறியியல் கல்லூரியில் உள்ள படிப்புகளில் சேருவதில் ஆர்வம் காட்டுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டில் வழக்கத்துக்கு மாறாக, முதல் ரேங்க் பெற்ற மாணவர்களில் நான்கு பேர், கவுன்சலிங்கில் அரசு உதவி பெறும் கல்லூரியான பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியைத் தேர்வு செய்தனர். எனினும், மாணவர்களின் முதல் சாய்ஸ் கிண்டி பொறியியல் கல்லூரி என்பது தொடர்கிறது. அத்துடன், அந்தக் கல்லூரியில் தங்களது இரண்டாவது, மூன்றாவது விருப்பத்தில் உள்ள படிப்புகளில் இடம் கிடைத்தால் கூட போதும் என்று சேருவதில் மாற்றம் இல்லை.

முதல் நாளில் கவுன்சலிங்கிற்கு அழைக்கப்பட்ட 2,399 மாணவர்களில் 730 மாணவர்கள் கவுன்சலிங்கிற்கு வரவில்லை. 6 மாணவர்கள் கவுன்சலிங்கிற்கு வந்து விட்டு எந்தக் கல்லூரியையும் தேர்வு செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க அம்சம்.

மாணவர்களின் முதல் சாய்ஸ் வழக்கம் போல எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன். அதேசமயம், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்பில் சேருவதில் மாணவர்களிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ், சிவில் ஆகிய பாடப்பிரிவுகளில் சேருவதிலும் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். முதல் நாளில் 436 மாணவர்கள் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் பாடப்பிரிவையும் 376 பேர் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பாடப்பிரிவையும் 271 பேர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவையும் 161 பேர் எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவையும் 111 பேர் சிவில் பாடப்பிரிவையும் 109 பேர் ஐ.டி. பாடப்பிரிவையும் தேர்வு செய்தனர். எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் பாடப்பிரிவைத் தேர்வு செய்தவர்களில் அதிகம் பேர் மாணவிகள். அதாவது 271 மாணவிகள் இப்படிப்பைத் தேர்வு செய்தனர். இசிஇ படிப்பைத் தேர்வு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 165-தான். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பாடப்பிரிவைத் தேர்வு செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்களே (367 மாணவர்கள்). கவுன்சலிங்கிற்கு வரும் மாணவர்களின் பலர், தாங்கள் விரும்பிய பாடப்பிரிவுகளில் சேருவதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். சில மாணவர்கள், தாங்கள் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்காவிட்டாலும் விரும்பிய கல்லூரியில் தங்களது அடுத்த சாய்ஸை தேர்வு செய்கின்றனர்.

இந்த ஆண்டு மாணவர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் 42 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்களும் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் பாடப்பிரிவில் 41 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்களும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரில் 32 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்களும் உள்ளன. அரசு ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் கவுன்சலிங்கில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இருந்தாலும்கூட விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை  1.68 லட்சம்தான். எனவே, விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைப்பதில் பிரச்சினை இருக்காது. ஆனால், அவர்கள் விரும்பிய கல்லூரிகளில் விரும்பிய பாடப்பிரிவுகளில் இடம் கிடைக்குமா என்பதுதான் பிரச்சினை. அதேசமயம்,  கவுன்சலிங்கின் முடிவில் காலி இடங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: தமிழகத்தில், மருத்துவ படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வில் அனைத்து இடங்களும் நிரம்பின. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, 21ம் தேதி துவங்கியது.

அரசு, சுய நிதி கல்லூரிகளில், 253 எம்.பி.பி.எஸ்., மற்றும் 1,036 பி.டி.எஸ்., இடங்களும் இருந்தன. ஐந்தாம் நாளான நேற்று, 314 பி.டி.எஸ்., இடங்களுடன் கலந்தாய்வு முடிந்தது. பிற்பகலில், அனைத்து இடங்களும் நிரம்பின.

முதற்கட்ட கலந்தாய்வில், 2,552 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 75 பி.டி.எஸ்., இடங்களும் ஒதுக்கப்பட்டன. தமிழகத்தில், ஐந்து மருத்துவக் கல்லூரிகளில், 750 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு மத்திய அரசு அனுமதி தரவில்லை. இதற்கு அனுமதி கிடைத்தால், மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடக்கும் என, தெரிகிறது.

இதுகுறித்து, மாணவர் சேர்க்கை செயலர் சுகுமார் கூறுகையில், &'&'சுய நிதி கல்லூரிகளில் அனுமதி கிடைத்தாலோ, அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்கள், மாநிலத்திற்கு திரும்ப ஒப்படைக்கப்பட்டாலோ, இடங்களுக்கு ஏற்ப, மூன்றாம் கட்ட கலந்தாய்வு, செப்டம்பரில் நடத்தப்படும்,&'&' என்றார்.

Saturday, July 26, 2014

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் சேர சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நடந்து வருகின்றது.
கடந்த 19 நாட்களாக நடைபெற்று வரும் கலந்தாய்வில் 99,735 பேர் அழைக்கப்பட்டு, 69,595 பேர் சேர்க்கைக்கான கடிதத்தை பெற்றுள்ளனர். இதுவரை 29,851 பேர் கலந்தாய்வில் பங்கேற்காமல் தவிர்த்துள்ளனர்.
தொடர்ந்து இன்றும் கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது. கூடுதல் தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கவும்.
பிஇ கலந்தாய்வில் 1,34,250 இடங்கள் காலியாக உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
பொறியியல் படிப்பில் சேர பொதுப்பிரிவு கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகின்றது.
கடந்த ஜூலை 7ம் தேதி முதல் நடைபெற்ற கலந்தாய்வில் இதுவரை, 69,595 சேர்க்கைக்கான ஒதுக்கீடு பெற்றுள்ளனர். தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. சேர்க்கைக்கு இன்னும் 1,34,250 இடங்கள் காலியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.
பிஇ கலந்தாய்வில் 1,34,250 இடங்கள் காலியாக உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
பொறியியல் படிப்பில் சேர பொதுப்பிரிவு கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகின்றது.
கடந்த ஜூலை 7ம் தேதி முதல் நடைபெற்ற கலந்தாய்வில் இதுவரை, 69,595 சேர்க்கைக்கான ஒதுக்கீடு பெற்றுள்ளனர். தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. சேர்க்கைக்கு இன்னும் 1,34,250 இடங்கள் காலியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

Thursday, July 24, 2014

எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு இன்று நிறைவு

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.- பிடிஎஸ் 2-ஆம் கட்டக் கலந்தாய்வு வெள்ளிக்கிழமையுடன் (ஜூலை 25) நிறைவடைகிறது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் கடந்த 21-ஆம் தேதி எம்.பி.பி.எஸ்.-பிடிஎஸ் 2-ஆம் கட்டக் கலந்தாய்வு தொடங்கியது.
தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள் உள்பட சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் ஏற்பட்ட அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் இருந்த காலியிடங்கள் என அனைத்தும் நிரப்பப்பட்டுவிட்டன.
சுயநிதி பல் மருத்துவக் கல்லூரி 1,020 அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்களை நிரப்பும் பணி கடந்த 2 நாள்களாக நடைபெற்று வருகிறது. கலந்தாய்வின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை மீதமுள்ள 314 அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

Sunday, July 20, 2014

மதுரை: மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கான 2ம் கட்ட கவுன்சிலிங் நாளை துவங்க உள்ள நிலையில் கட் ஆப் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் பல்மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் முடிந்துவிட்டது. இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நாளை (ஜூலை 21) முதல் 25ம் தேதி வரை நடக்க உள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீத இடங்கள், முதற்கட்ட கவுன்சிலிங்கில் விடுபட்ட இடங்கள் என 253 இடங்களுக்கு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் இந்த கவுன்சிலில் நடைபெறும்.
அரசு மற்றும் உதவிபெறும் மருத்துவ கல்லூரிகளுக்கான இடங்களில் பொதுப் பிரிவுக்கு 47 இடங்கள், பி.சி. 49, பி.சி. (முஸ்லிம்) 5, எம்.பி.சி. 30, எஸ்.சி. 25, எஸ்.சி. (அருந்ததியினர்) 5, பழங்குடியினர் 2 இடங்கள் உள்ளன.
இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் பொதுப்பிரிவு 20, பி.சி. 17, பி.சி. (முஸ்லிம்) 2, எம்.பி.சி., 13, எஸ்.சி, 10, எஸ்.சி., (அருந்ததியினர்) 2, எஸ்.டி. 1 இடம் உள்ளது.
சுயநிதி மருத்துவ கல்லூரிகளைப் பொறுத்தவரை கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் 1, கன்னியாகுமரி மூகாம்பிகை கல்லூரியில் 2, சென்னை கற்பக விநாயகர் கல்லூரியில் 5, கோவை கற்பகம் கல்லூரியில் 7, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் 4, மதுரை வேலம்மாள் கல்லூரியில் 6 இடங்கள் என மொத்தம் 25 இடங்கள் உள்ளன.
மருத்துவம் கட் ஆப்
2ம் கட்ட கவுன்சிலிங்கில் கட்ஆப் பொதுப் பிரிவு மற்றும் பிற்பட்டோர் பிரிவில் 199.25 முதல் 198.25 வரை உள்ளது. இதில் பி.சி. முஸ்லிம் 197 வரை; எம்.பி.சி. 197.5 வரை; எஸ்.சி. 194.25 வரை; எஸ்.சி. (அருந்ததியினர்) 191.5 வரை; எஸ்.டி. 186.5 வரை பங்கேற்பர்.
பல் மருத்துவம் கட் ஆப்
பல் மருத்துவத்திற்கு ஜூலை 22 முதல் 2ம் கட்ட கவுன்சிலிங் நடக்க உள்ளது. இதற்கான கட் ஆப் வருமாறு: பொதுப் பிரிவு 197.75, பி.சி., (முஸ்லிம்) 196.5, எம்.பி.சி., 196.5, எஸ்.சி., 192.25, எஸ்.சி., (அருந்ததியினர்) 189, எஸ்.டி., 181 வரை பங்கேற்பர். பிளஸ்2 மதிப்பெண் சரிபார்ப்பு, மறு மதிப்பீடு, மறு கூட்டலில் கூடுதல் மதிப்பெண் பெற்றவர்கள், அதன் அடிப்படையில் இதில் பங்கேற்கலாம்.

Saturday, July 12, 2014

எம்.பி.பி.எஸ். இடத்தை ஒப்படைத்தவர்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்வு

எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த 26 மாணவ, மாணவியர் தாங்கள் தேர்வு செய்த இடங்களை ஒப்படைத்துவிட்டு பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களைத் தேர்வு செய்யபவர்களில் சிலர், பல்வேறு காரணங்களால் அந்த இடங்களை ஒப்படைத்துவிட்டு, அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்று பி.இ. இடங்களைத் தேர்வு செய்து வருவது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வருகிறது.

இதுபோல் 2014-15 பொறியியல் கலந்தாய்விலும், மாணவர்கள் எம்.பி.பி.எஸ். இடங்களை ஒப்படைத்துவிட்டு பி.இ., பி.டெக். இடங்களைத் தேர்வு செய்து வருகின்றனர்.

கலந்தாய்வின் முதல் நாளான திங்கள்கிழமை (ஜூலை 7) 11 மாணவ, மாணவிகள் தாங்கள் தேர்வு செய்த எம்.பி.பி.எஸ். இடங்களை ஒப்படைத்துவிட்டு பொறியியல் இடங்களை தேர்வு செய்தனர். இரண்டாம் நாளில் 2 மாணவ, மாணவிகளும், மூன்றாம் நாளில் 10 பேரும் நான்காம் நாளில் 3 பேரும் என மொத்தம் 26 பேர் எம்.பி.பி.எஸ். இடத்தை ஒப்படைத்துவிட்டு பொறியியல் படிப்புகளைத் தேர்வு செய்துள்ளனர்.

Monday, June 16, 2014

கவுன்சிலிங்கில் குளறுபடி கூடாது: பள்ளிகல்வித்துறை உத்தரவு

எந்த குளறுபடியும் இன்றி, ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்தி முடிக்க வேண்டும்,' என, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், ஆசிரியர் பயிற்றுனர் பணிநிரவல், ஆசிரியர்கள் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்விற்கான கவுன்சிலிங், நேற்று துவங்கி, ஜூன் 29 வரை நடக்கிறது. இதற்காக ஆசிரியர்கள், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களின் ஒப்புதலோடு, சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைகல்வி அலுவலகங்களில் நேரில் விண்ணப்பம் செய்தனர். அதற்கான ஒப்புகை சீட்டு அவர்களிடம் வழங்கப்பட்டது. இந்நிலையில், இக்கவுன்சிலிங்கை எந்த குளறுபடியும் இன்றி நடத்தி முடிக்க வேண்டும் என, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்வித்துறை உயர்அதிகாரி ஒருவர் கூறுகையில்," கவுன்சிலிங்கிற்காக ஆசிரியர்கள் விண்ணப்பித்தபோதே, அவர்களது பெயர், பிறந்த தேதி, பணியில் சேர்ந்த தேதி, தற்போதைய பணியிடம், மாறுதல் கேட்கும் மாவட்டம், என்ன காரணம் என்பன போன்ற பல்வேறு விபரங்கள் சேகரிக்கப்பட்டு, கம்ப்யூட்டரில் டைப் செய்து, அவர்களிடம் பிரின்ட் அவுட் தரப்பட்டது. அதில் பிழை இருந்தால் திருத்தி, சரியான விபரங்களுடன், அவர்களது விண்ணப்பம் ஆன்லைனில் அப்லோடு செய்யப்பட்டது. அதனடிப்படையில் சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்பட்டு, கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. சிபாரிசின் அடிப்படையில் வேண்டியவர்களுக்கு மட்டும் கேட்ட இடம் ஒதுக்கப்பட்டதாக, இதில் புகார் எழவாய்ப்பில்லை. எனினும், குளறுபடியின்றி கவுன்சிலிங் நடத்தி, மாறுதல் உத்தரவு வழங்க, பள்ளிகல்வித்துறையால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது,” என்றார்.

Saturday, June 14, 2014

எம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் மதிப்பெண் விவரம்: (வகுப்பு வாரியாக) 

ஓ.சி. 199.25

பி.சி. 198.25

பி.சி. (முஸ்லிம்) 197.00

எம்.பி.சி. 197.25

எஸ்.சி. 194.75

எஸ்.சி. (அருந்ததியினர்) 192.00

எஸ்.டி. 187.50

கடும் கட்-ஆஃப் போட்டி ஏன்?

எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலில் 200-க்கு 200-ல் 132 பேர், 200-க்கு 199.75-ல் 105 பேர் 200-க்கு 199.50-ல் 188 பேர் என ஒரே கட்-ஆஃப் மதிப்பெண்ணில் ஏராளமான மாணவர்கள் இடம்பெற்றுள்ளதே கட்-ஆஃப் மதிப்பெண் போட்டிக்கு முக்கியக் காரணமாகும். மேலும் பி.இ. படிப்பை போன்று லட்சக்கணக்கில் எம்.பி.பி.எஸ். இடங்கள் இல்லாததும் கட்-ஆஃப் மதிப்பெண் போட்டிக்குக் காரணமாகும்.

சென்னை மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் சனிக்கிழமை (ஜூன் 14) வெளியிடப்பட்ட எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் 200-200-க்கு தொடங்கி ஒரே கட்-ஆஃப் மதிப்பெண்ணில் இடம்பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை விவரம்:-

200-க்கு 200 - 132

200-க்கு 199.75 - 105

200-க்கு 199.67 - 1

200-க்கு 199.50 - 188

200-க்கு 199.33 - 1

200-க்கு 199.25 - 236

200-க்கு 199.00- 246

200-க்கு 198.75 - 274

200-க்கு 198.50 - 292

200-க்கு 198.25 - 308

200-க்கு 198.00 - 314

200-க்கு 197.75 - 335

200-க்கு 197.50 - 289

200-க்கு 197.34 - 1

200-க்கு 197.25 - 311

200-க்கு 197.00 - 307

200-க்கு 196.75 - 330

200-க்கு 196.50 - 298

200-க்கு 196.34 - 1

200-க்கு 196.25 - 299

200-க்கு 196.00 - 366
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். தரவரிசைப் பட்டியலில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ஐ 132 மாணவர்கள் எடுத்து இந்த ஆண்டு இடம்பெற்றுள்ளனர்.
கடந்த கல்வி ஆண்டில் (2013-14) எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ஐ 7 மாணவர்களும், 2012-13-ஆம் கல்வி ஆண்டில் கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ஐ 17 மாணவர்களும் மட்டுமே பெற்றிருந்தனர். ஆனால் இந்த ஆண்டு கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ஐ 132 மாணவர்கள் பெற்றுள்ளதையடுத்து, எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர ஆர்வத்துடன் காத்திருக்கும் மாணவர்களுக்கு இடையே கடும் கட்-ஆஃப் மதிப்பெண் போட்டி உறுதியாகியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தரவரிசைப் பட்டியலை சனிக்கிழமை (ஜூன் 14) வெளியிட்டார். சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி, மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஆர்.ஜி.சுகுமார் ஆகியோர் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். தரவரிசைப் பட்டியல் குறித்து அளித்த தகவல்கள்:-
முதல் 10 மாணவர்கள்: கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200 எடுத்துள்ள 132 பேரில் (69 பேர் மாணவர்கள், 63 பேர் மாணவிகள்) தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கணிதம்-இயற்பியல்-வேதியியல்-உயிரியல் ஆகிய பாடங்கள் அனைத்திலும் 200-க்கு 200 பெற்றுள்ள 132 மாணவர்களில், 76 பேர் பிறந்த தேதி, ரேண்டம் எண் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக 132 மாணவர்களில் 15 மாணவர்கள் ரேண்டம் எண் அடிப்படையில் (கடந்த ஆண்டு 11 பேருக்கு ரேண்டம் எண் பயன்படுத்தப்பட்டது.) வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் சென்னை கோபாலபுரம் டிஏவி பள்ளி மாணவர் கே.சுந்தர் நடேஷ் உள்பட 10 பேர் முதல் 10 இடங்களில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 6 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
நாமக்கல் பள்ளி சாதனை: எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலில் சென்னை கோபாலபுரம் டிஏவி மேல்நிலைப் பள்ளி மாணவர் கே.சுந்தர் நடேஷ், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.அபிஷேக், ஈரோடு பாரதி வி.பவன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் வி.எஸ்.விஜயராம், நாமக்கல் போதுப்பட்டி கிரீன் பார்க் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.மிதுன், நாமக்கல் போதுப்பட்டி கிரீன் பார்க் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி ஈ.ஸ்ருதி, நாமக்கல் கிரீன் பார்க் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.நிவேதா, ஈரோடு அந்தியூர் ஆதர்ஷ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவி கே.ஆர்.மைதிலி, நாமக்கல் போதுப்பட்டி கிரீன் பார்க் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி ஈ.கரோலின் திவ்யா, நாமக்கல் போதுப்பட்டி கிரீன் பார்க் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த முதல் தலைமுறை (குடும்பத்தில் முதல் பட்டதாரி) மாணவர் வி.கௌதம், நாமக்கல் ராசிபுரம் எஸ்.ஆர்.வி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.மைவிழி ஸ்ருதி ஆகியோர் 200-க்கு 200 பெற்று முதல் 10 இடங்களில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேர் நாமக்கல் கிரீன் பார்க் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் விகிதம் 42 சதவீதம்: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 27,539 மாணவர்களில், 1,402 பேர் மட்டுமே முற்பட்ட வகுப்பை (எஃப்ஓசி) பிரிவைச் சேர்ந்தவர்கள்; 11,616 மாணவர்கள், அதாவது 42 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்; 1,427 மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பைச் சேர்ந்தவர்கள்; 5,944 மாணவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்; 6,031 மாணவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்; 903 மாணவர்கள் தாழ்த்தப்பட்ட (அருந்ததியினர்) வகுப்பைச் சேர்ந்தவர்கள்; 216 மாணவர்கள் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
10,061 முதல் தலைமுறை மாணவர்கள்: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்து தகுதியுள்ள 27,539 விண்ணப்பங்களில், 10,061 பேர் முதல் தலைமுறையை (குடும்பத்தில் முதல் பட்டதாரிகள்) பிரிவைச் சேர்ந்தவர்கள். கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ஐ பெற்றுள்ள 132 மாணவர்களில், 19 பேர் முதல் தலைமுறை மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இணையதளத்தில்...: சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் (பி.இ.) படிப்புக்கு ரேண்டம் எண் ஜூன் 16 ஆம் தேதியும், மருத்துவம் (எம்.பி.பி.எஸ்.) மற்றும் பல் மருத்துவம் (பி.டி.எஸ்), வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளுக்கு ரேண்டம் எண்கள் ஜூன் 18ஆம் தேதியும் வெளியிடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2014-15ஆம் ஆண்டுக்கான மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பப் படிவம் கடந்த மே 9ஆம் தேதி முதலும், பி.எஸ்.சி. வேளாண்மை, பி.எஸ்.சி. தோட்டக்கலைப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் மே 12ஆம் தேதி முதலும் வழங்கப்பட்டன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் 11 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
÷அதன்படி, அண்ணாமலைப் பல்கலைக்கழக எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் சேர 7,651 பேரும் பி.எஸ்.சி. வேளாண்மை, பி.எஸ்.சி. தோட்டக்கலை படிப்புகளில் சேர 1,16,544 பேரும் பி.இ. படிப்பில் சேர 2,545 பேரும் மருந்தியல் (பி.பார்மசி) பி.பி.டி., பி.எஸ்.சி. நர்சிங் படிப்புகளில் சேர 947 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2014-15ஆம் கல்வி ஆண்டில் பி.இ. படிப்புக்கு 3 ஆயிரம் மாணவர்களும், பி.எஸ்.சி. வேளாண்மைப் படிப்புக்கு ஆயிரம் மாணவர்களும், பி.எஸ்.சி. தோட்டக்கலை படிப்புக்கு 75 மாணவர்களும் சேர்க்கப்படுவார்கள் என பல்கலை. நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்துள்ளார்.
ரேண்டம் எண்கள் நாளை வெளியீடு: பொறியியல் படிப்பிற்கு ரேண்டம் எண் ஜூன் 16ஆம் தேதியும், மருத்துவம் மற்றும் பல் மருத்துவம், வேளாண்மை, தோட்டக்கலை ஆகிய படிப்புகளுக்கு ஜூன் 18ஆம் தேதியும் ரேண்டம் எண்கள் வெளியிடப்படவுள்ளன.
அனுமதி சேர்க்கை முற்றிலும் தகுதி அடிப்படையிலும், அரசு விதிமுறைகள் இடஒதுக்கீடு முறையிலும் நடைபெறுகிறது.
மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தலைமை நிர்வாக அலுவலகத்தில் நடைபெறும். கலந்தாய்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்படும்.
ரேண்டம் எண் குறித்த விவரங்களை பல்கலைக்கழக இணையதளம் www.annamalaiauniversity.ac.in என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேலும் உதவி மைய தொலைபேசி எண்கள் 04144-238348, 238349.
எம்.பி.பி.எஸ். தர வரிசைப் பட்டியலில் பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த ஊத்தங்கரை சாதனை மாணவி எஸ்.சுஷாந்திக்கு 191-வது இடம் கிடைத்துள்ளது.
பிளஸ் 2 தேர்வில் தமிழ் அல்லது மொழி, ஆங்கில பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் எம்.பி.பி.எஸ்.-பி.இ. படிப்பில் சேர உயிரியல்-இயற்பியல்-வேதியியல்-கணித பாடங்களுக்கு மிகுந்த முக்கியத்துவத்தை மாணவர்கள் அளித்துள்ளனர்.
சென்னையில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் 200-க்கு 200 பெற்ற 132 மாணவர்களில், உயிரியல்-இயற்பியல்-வேதியியல்-கணிதம் ஆகிய நான்கிலும் 200-க்கு 200 பெற்று முதல் 10 இடங்களில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள மாணவர்களின் பிளஸ் 2 மொத்த மதிப்பெண்ணே இதற்குச் சான்றாகும். இவர்கள் பிளஸ் 2 தேர்வில் ரேங்க் எடுத்த மாணவர்களை எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலில் பின்னுக்குத் தள்ளியுள்ளனர்.
எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ள மாணவர்களின் பிளஸ் 2 தேர்வு மொத்த மதிப்பெண் விவரம்:-
சென்னை கோபாலபுரம் டிஏவி மேல்நிலைப் பள்ளி மாணவர் கே.சுந்தர் நடேஷ்-மொத்த மதிப்பெண் 1167; கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.அபிஷேக்-1171; ஈரோடு பாரதி வி.பவன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் வி.எஸ்.விஜயராம்-1178; நாமக்கல் போதுப்பட்டி கிரீன் பார்க் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.மிதுன்-1185; நாமக்கல் போதுப்பட்டி கிரீன் பார்க் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி ஈ.ஸ்ருதி-1189; நாமக்கல் கிரீன் பார்க் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.நிவேதா-1186; ஈரோடு அந்தியூர் ஆதர்ஷ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவி கே.ஆர்.மைதிலி-1176; நாமக்கல் போதுப்பட்டி கிரீன் பார்க் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி ஈ.கரோலின் திவ்யா-1181; நாமக்கல் போதுப்பட்டி கிரீன் பார்க் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த முதல் தலைமுறை (குடும்பத்தில் முதல் பட்டதாரி) மாணவர் வி.கௌதம்-1179; நாமக்கல் ராசிபுரம் எஸ்.ஆர்.வி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.மைவிழி ஸ்ருதி-1177. இவர்களில் மாணவி ஈ.ஸ்ருதி மட்டும் பிரெஞ்சு பாடத்தை மொழி பாடமாக எடுத்துப் படித்தவர்.
பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த மே 9-ஆம் தேதி வெளியிடப்பட்டபோது, மாநிலத்தில் முதலிடம் பிடித்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி எஸ்.சுஷாந்தி எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலில் 191-ஆவது இடத்தில் இடம்பெற்றுள்ளார். பிளஸ் 2 தேர்வில் இவரது மொத்த மதிப்பெண் 1200-க்கு 1193. இயற்பியல், உயிரியல் பாடங்களில் இவர் 200-க்கு 200 பெற்ற போதிலும், வேதியியல் பாடத்தில் 200-க்கு 199 பெற்றதால் இவரது கட்-ஆஃப் மதிப்பெண் 199.75. இதனால் இவர் தரவரிசைப் பட்டியலில் 191-ஆவது இடத்தில் உள்ளார்.
இதே போன்று இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 1,200-க்கு 1,192 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பிடித்த தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஏ.எல்.அலமேலு, எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலில் 338-ஆவது இடத்தில் உள்ளார். இவர் இயற்பியல்-வேதியியல் பாடங்களில் 200-க்கு 200 பெற்றிருந்தாலும்கூட, உயிரியல் பாடத்தில் 200-க்கு 199 பெற்றதால் கட்-ஆஃப் மதிப்பெண் 199.50-ஆக நிர்ணயிக்கப்பட்டு 338-வது இடத்தில் இடம்பெற்றுள்ளார்.

இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 1200-க்கு 1191 பெற்று மாநிலத்தில் 3-ஆம் பிடித்த நாமக்கல் போதுப்பட்டி கிரீன் பார்க் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் டி.துளசிராஜன், எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலில் 84-ஆவது இடத்தில் இடம்பெற்றுள்ளார். உயிரியல்-இயற்பியல்-வேதியியல் ஆகிய மூன்று பாடங்களில் 200-க்கு 200 பெற்றிருந்தாலும், பிறந்த தேதி மற்றும் ரேண்டம் எண் அடிப்படையில் இவருக்கு 84-வது இடம்தான் கிடைத்துள்ளது.

நள்ளிரவில் வந்த மதிப்பெண் சி.டி.!

எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய உயிரியல்-வேதியியல்-இயற்பியல் பாடங்களில் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களின் திருத்தப்பட்ட மதிப்பெண் சி.டி.-ஐ மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவிடம் பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) நள்ளிரவு அளித்தனர்.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்து தகுதி பெற்றுள்ள 27,539 பேரில், மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்திருந்த 900 மாணவர்களின் திருத்தப்பட்ட மதிப்பெண் அடங்கிய சி.டி.-ஐ மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகளிடம் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதையடுத்து எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். ரேங்க் பட்டியலை முழுமைப்படுத்தும் பணி சனிக்கிழமை அதிகாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.
மறு மதிப்பீடு மூலம் திருத்தப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் இரண்டு மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ஐ பெற்றதால், 200-க்கு 200-ஐப் பெற்றோரின் எண்ணிக்கை 130-லிருந்து 132-ஆக அதிகரித்தது. இதே போன்று எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்புள்ள 100 மாணவர்களுக்கு மதிப்பெண் அதிகரித்து மறு மதிப்பீடு மூலம் பலன் கிடைத்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்: இதே போன்று பி.இ. படிப்புக்கு உரிய கணிதம்-இயற்பியல்-வேதியியல் ஆகிய பாடங்களில் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் அடங்கிய சி.டி.-ஐ அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் குழு அதிகாரிகளிடம் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் அளிப்பார்கள் எனத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
எம்.பி.பி.எஸ் தரவரிசை பட்டியல்: நாமக்கல், ஈரோடு பள்ளிகள் ஆதிக்கம் 

எம்.பி.பி.எஸ் மற்றும் பல்மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி இயக்குனர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.

தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவ–மாணவிகள் பெயர் விவரம் வருமாறு:–

1. கே.சுந்தர்நடேஷ்– மேற்கு மாம்பலம் (டி.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி, கோபாலபுரம்).

2. எஸ்.அபிஷேக்–தேனாம் பேட்டை (ஸ்ரீவித்யா மந்திரி மெட்ரிக் பள்ளி, ஊத்தங்கரை).

3. வி.எஸ்.விஜயராம்– ஈரோடு (பாரதி வித்யாபவன் பள்ளி, திண்டல்).

4. எம்.மிதுன்–நாமக்கல் (கிரீன் பார்க் பள்ளி, நாமக்கல்).

5. ஈ.சுருதி–கோவை (கிரீன் பார்க் பள்ளி, நாமக்கல்).

6. கே.நிவேதா– நெய்வேலி (கிரீன் பார்க் பள்ளி, நாமக்கல்).

7. கே.ஆர்.மைதிலி–நாமக்கல் (ஆதர்னல் வித்யாலயா பள்ளி, அந்தியூர்).

8. ஈ.கலோவின் திவ்யா– கோவை (கிரீன் பார்க் பள்ளி–நாமக்கல்).

9. வி.கவுதம்–நாமக்கல் (கிரீன்பார்க் பள்ளி, நாமக்கல்).

10. எம்.மைவிழி சுருதி– ராசிபுரம் (எஸ்.ஆர்.வி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராசிபுரம்).

மாணவர் சேர்க்கை கமிட்டி செயலாளர் டாக்டர் சுகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:–

எம்.பி.பி.எஸ் மற்றும் பல்மருத்துவ அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கு 28 ஆயிரத்து 53 விண்ணப்பங்கள் மாணவ–மாணவிகளிடம் இருந்து பெறப்பட்டன. இதில் 368 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 27 ஆயிரத்து 539 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இதில் ஆண்கள் 10 ஆயிரத்து 105 பேர் பெண்கள் எண்ணிக்கை 17 ஆயிரத்து 434.

முதல் தலைமுறை பட்டதாரிகள் 10 ஆயிரத்து 61 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 132 மாணவ– மாணவிகள் 200–க்கு 200 மதிப்பெண் பெற்று ரேங்க் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

மருத்துவபட்டப் படிப்புக்கான முதல் கலந்தாய்வு 17–ந்தேதி காலை 9 மணிக்கு சிறப்பு பிரிவினருக்காக நடைபெறுகிறது. இதில் விளையாட்டு பிரிவு, மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள் பங்கேற்கிறார்கள்.

பொதுப் பிரிவு கலந்தாய்வு 18–ந்தேதி தொடங்கி 22–ந்தேதி வரை நடைபெறுகிறது. 19 அரசு மருத்துவ கல்லூரிகளில் 2555 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய இட ஒதுக்கீடு 383 போக மீதம் உள்ள 2172 இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகிறது.

அரசு பல்மருத்துவ கல்லூரியில் 85 இடங்கள், தனியார் மருத்துவ கல்லூரி களில் அரசு ஒதுக் கீட்டு இடங்கள் 993 உள்ளன. இந்த இடங்களும் பொது கலந்தாய்வில் நிரப்பப்படுகின்றன.

முதல் கட்ட கலந்தாய்வில் 400 எம்.பி.பி.எஸ் இடங்கள் சேர்க்கப்படவில்லை. அவை 2–வது கட்ட கலந்தாய்வில் எடுத்துக் கொள்ளப்படும். 2–வது கட்ட கவுன்சிலிங் ஜூலை 2–வது வாரம் நடைபெறும். செப்டம்பர் 1–ந்தேதி அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்கும்.

தினந்தோறும் நடைபெறும் கலந்தாய்வு பற்றிய விவரங்கள் மற்றும் காலி இடங்கள் பற்றியவிவரம் மருத்துவ கல்வி இணைய தளத்தில் இடம் பெறும். தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கான கல்வி கட்டணம் கடந்த ஆண்டு என்ன நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ இதுவரை அதில் எந்த மாற்றமும் இல்லை. 11 தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் தேர்வு செய்பவர்கள் ரூ.25 ஆயிரம் டெபாசிட் செலுத்த வேண்டும். இதை திரும்ப பெற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் கீதாலட்சுமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Wednesday, June 11, 2014

மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் 46 ஆயிரத்து 271 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களில் 18 ஆயிரத்து 115 மாணவ, மாணவிகள் மாநில அரசுகளின் கீழ் உள்ள 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேருவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். (அரசு ஒதுக்கீடு) இடங்களில், அந்தந்த மாநிலங்களில் உள்ள நடைமுறைகளின்படி மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை மதிப்பெண் அடிப்படையில் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
அதே நேரம் நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மொத்த இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படுகிறது.
இந்த 15 சதவீத இடங்களில், அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
இதுபோல் 2014-ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு கடந்த மே 4-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 50 நகரங்களில் 929 தேர்வு மையங்களில் இத் தேர்வு நடத்தப்பட்டது.
நாடு முழுவதிலும் இருந்து 5 லட்சத்து 23 ஆயிரத்து 701 பேர் தேர்வை எழுதினர். இந்த நுழைவுத் தேர்வு முடிவுகள் சனிக்கிழமை (ஜூன் 7) வெளியிடப்பட்டன. இதில் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க 46 ஆயிரத்து 271 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களில் மாநில அரசுகளின் கீழ் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேருவதற்கு 18 ஆயிரத்து 115 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதில் 9 ஆயிரத்து 716 பேர் மாணவர்கள்; 8 ஆயிரத்து 399 பேர் மாணவிகள்; தேர்வு முடிவுகள், தரவரிசைப் பட்டியல் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடத்துக்கான கட்-ஆஃப் மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் www.aipmt.nic.in, www.cbse.nic.in, www.cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
ஜூன் 14-இல் எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் நடப்புக் கல்வி ஆண்டில் (2014-15) மாணவர்களைச் சேர்க்க சென்னையில் வரும் சனிக்கிழமை (ஜூன் 14) தரவரிசைப் பட்டியலை வெளியிட மருத்துவக் கல்வி தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளது.

மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துள்ள பிளஸ் 2 மாணவர்களின் திருத்தப்பட்ட மதிப்பெண்ணை பள்ளிக் கல்வித் துறை அளித்தவுடன், தரவரிசைப் பட்டியலை முழுமையாக தயாரிக்க மருத்துவக் கல்வி தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது. இதனால்தான் தரவரிசைப் பட்டியலை வரும் 14-ஆம் தேதி வெளியிட அது முடிவு செய்துள்ளது.

2,172 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்: சென்னை உள்பட 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 2,172 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பிக்கும் 900-த்துக்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 85 பி.டி.எஸ். இடங்கள் ஆகியவற்றில் சேர இந்த ஆண்டு மொத்தம் 27,907 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அளிப்பதற்கான காலக்கெடு கடந்த ஜூன் 2-ஆம் தேதி முடிவடைந்தது.

"ரேண்டம் எண்' ஒதுக்கீடு: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 27,907 மாணவர்களுக்கும் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலர் அலுவலகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி முன்னிலையில் கம்ப்யூட்டர் மூலம் 10 இலக்க

"ரேண்டம் எண்' (சம வாய்ப்பு எண்) திங்கள்கிழமை (ஜூன் 9) வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்ட சம வாய்ப்பு எண்ணை சுகாதாரத் துறை இணையதளம் www.tnhealth.org மூலம் தெரிந்து கொள்ளலாம்.

"ரேண்டம் எண்' எதற்காக? எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களில் ஒரே கட்-ஆஃப் மதிப்பெண்ணை சில மாணவர்கள் பெற்றுள்ள நிலையில் தரவரிசைப் பட்டியலில் அவர்களை வரிசைப்படுத்த குறிப்பிட்ட நடைமுறை பின்பற்றப்படுகிறது.

அதாவது பிளஸ் 2 தேர்வில் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் மதிப்பெண் சேர்த்து பெற்ற சதவீத மதிப்பெண் பார்க்கப்படும்; அதிலும் ஒரே மதிப்பெண்ணாக இருந்தால், பிளஸ் 2 தேர்வில் வேதியியல் பிரிவில் பெற்ற சதவீத மதிப்பெண் பார்க்கப்படும்; அதிலும் சமமாக இருந்தால் பிளஸ் 2 தேர்வில் நான்காவது விருப்ப பாடப் பிரிவில் சதவீத மதிப்பெண் பார்க்கப்படும்; அதிலும் சமமாக இருந்தால் மாணவர்களின் பிறந்த தேதி பார்க்கப்பட்டு, வயதில் மூத்தோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இவை அனைத்திலும் மாணவர்கள் சமமாக இருக்கும் நிலையில், கம்ப்யூட்டர் அடிப்படையில் தயாராக உள்ள ரேண்டம் எண்ணை அடிப்படையாகக் கொண்டு, அதிகப்படியான எண்ணுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு மாணவர்கள் வரிசைப்படுத்தப்படுவார்கள்.

கடந்த கல்வியாண்டில் 11 பேர்: மேலே குறிப்பிட்ட ஒரே கட்-ஆஃப் மதிப்பெண்ணை எத்தனை மாணவர்கள் எடுத்துள்ளனர் என்பது வரும் 14-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாகும்போதுதான் தெரிய வரும்.

அப்போது பயன்படுத்தவே இப்போது ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த கல்வியாண்டில் (2013-14) எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். ரேங்க் பட்டியலில் ஒரே கட்-ஆஃப் மதிப்பெண்ணைப் பெற்ற 11 மாணவர்களுக்கு ரேண்டம் எண் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கலந்தாய்வு எப்போது? எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வை ஜூன் 25-ஆம் தேதிக்குள் முடிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஏற்கெனவே திட்டமிட்டபடி எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு வரும் 18-ஆம் தேதி தொடங்கும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Monday, June 9, 2014

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதல்முறையாக ஆன்லைன் முறையில் நடைபெற்ற இத்தேர்வை 58 ஆயிரம் பேர் எழுதினர்.
புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பில் 150 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு, ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் 12.30 மணி வரை நடந்தது. அகில இந்திய மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு அடிப்படையில் இத்தேர்வு நடந்தது.
நாடு முழுவதும் புதுச்சேரி, சென்னை, புதுதில்லி, கோவை, திருச்சி, நாமக்கல், கொல்கத்தா, சேலம், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், விஜயவாடா உள்பட 36 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 376 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடந்தது. இத்தேர்வை 58 ஆயிரம் பேர் எழுதினர். இத்தேர்வுக்கு 93 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இது கடந்தாண்டு எண்ணிக்கையை விட 35 சதவீதம் அதிகம். புதுச்சேரியில் ஜிப்மர் வளாகத்தில் 4 மையங்கள் உள்பட மொத்தம் 13 மையங்களில் நுழைவுத் தேர்வு நடந்தது.
இயற்பியல், வேதியியல், உயிரியல் தலா 60 மதிப்பெண்களும், ஆங்கிலம் 20 மதிப்பெண்களும் என மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது.
ஆள்மாறாட்டத்தைத் தடுக்க பயோமெட்ரிக் அடையாள அட்டையை ஜிப்மர் நிர்வாகம் வழங்கியிருந்தது. உரிய சோதனைக்குப்பின் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்களில் கண்காணிப்புக் கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தன.
இந்த நுழைவுத் தேர்வு முடிவுகள் வரும் 16-ஆம் தேதி இணைய தளம் மூலம் வெளியிடப்படும் என்று ஜிப்மர் வட்டாரங்கள் தெரிவித்தன.
மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் 46 ஆயிரத்து 271 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களில் 18 ஆயிரத்து 115 மாணவ, மாணவிகள் மாநில அரசுகளின் கீழ் உள்ள 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேருவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். (அரசு ஒதுக்கீடு) இடங்களில், அந்தந்த மாநிலங்களில் உள்ள நடைமுறைகளின்படி மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை மதிப்பெண் அடிப்படையில் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

அதே நேரம் நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மொத்த இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படுகிறது.

இந்த 15 சதவீத இடங்களில், அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

இதுபோல் 2014-ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு கடந்த மே 4-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 50 நகரங்களில் 929 தேர்வு மையங்களில் இத் தேர்வு நடத்தப்பட்டது.

நாடு முழுவதிலும் இருந்து 5 லட்சத்து 23 ஆயிரத்து 701 பேர் தேர்வை எழுதினர். இந்த நுழைவுத் தேர்வு முடிவுகள் சனிக்கிழமை (ஜூன் 7) வெளியிடப்பட்டன. இதில் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க 46 ஆயிரத்து 271 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களில் மாநில அரசுகளின் கீழ் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேருவதற்கு 18 ஆயிரத்து 115 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதில் 9 ஆயிரத்து 716 பேர் மாணவர்கள்; 8 ஆயிரத்து 399 பேர் மாணவிகள்; தேர்வு முடிவுகள், தரவரிசைப் பட்டியல் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடத்துக்கான கட்-ஆஃப் மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் www.aipmt.nic.in, www.cbse.nic.in, www.cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
410 மருத்துவ இடங்களுக்கு மாணவர் சேர்க்கையில் சிக்கல்: அரசு மருத்துவ கல்லூரிகளில் போதிய வசதியில்லை?

அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்களுக்கு ஏற்ப, போதிய வசதிகள் இல்லை' என, இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளதால், 410 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, மாணவர்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 2,550 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இதில், மத்திய அரசு ஒதுக்கீடு இடங்கள், 15 சதவீதம் போக, மீதமுள்ள, 2,172 இடங்களுக்கு, கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கப்பட உள்ளனர்.

கால அவகாசம்:

விண்ணப்பங்களை சமர்பிக்க, கால அவகாசம் முடிந்து விட்டது; 27,876 பேர் சமர்பித்துள்ளனர். 'முதற்கட்ட கலந்தாய்வு, வரும், 18ம் தேதி துவங்கும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வில், மாணவர்கள் அதிக மதிப்பெண்களை அள்ளியுள்ளதால், கடந்த ஆண்டை விட, 'கட் - ஆப்' மதிப்பெண் கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்குமா என, மாணவர்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஆண்டில், அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு கூடுதலாக தரப்பட்ட, 410 இடங்களில், மாணவர் சேர்க்கை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.

போதிய வசதிகள் இல்லை:

கூடுதல் இடங்களாக, கடந்த ஆண்டு, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி - 100; சென்னை - 85; சேலம் - 25; திருச்சி - 50; தூத்துக்குடி - 50 என, ஒதுக்கப்பட்டன. இது தவிர, புதிதாக, திருவண்ணாமலை அரசு மருத்துக் கல்லூரிக்கு, 100 இடங்களுக்கு அனுமதி தரப்பட்டு, மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். கூடுதல் இடங்கள் அனுமதித்த கல்லூரிகளில், போதிய வசதிகள் உள்ளதா என, ஐந்து ஆண்டுகளுக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்து, ஆண்டுதோறும் அனுமதி அளிக்கும். அதன்படி, இந்த ஆண்டுக்கான ஆய்வு நடந்து முடிந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, 'ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில், போதிய வசதிகள் இல்லை' எனக்கூறி, கூடுதல் இடங்களுக்கு அனுமதி தர மறுக்கப்பட்டுள்ளது. இதே போல், திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரிக்கும் சிக்கல் வந்துள்ளது. பிற கல்லூரிகளின் ஆய்வு முடிவுகள் இன்னும் வரவில்லை. எனவே, கூடுதலாக, 410 இடங்களுக்கு மாணவர்களை சேர்ப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதுதவிர, 2012ல், 100 இடங்களுடன் துவக்கப்பட்ட சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில், போதிய வசதி இல்லை என, அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளதால், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இதுகுறித்து, மருத்துவக்கல்வி இயக்குனர் கீதாலட்சுமி கூறுகையில், ''ஸ்டான்லி உள்ளிட்ட சில மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு செய்த இந்திய மருத்துவ கவுன்சில், சில குறைபாடுகளை சுட்டிக்காட்டியது. அவற்றை நிவர்த்தி செய்து, அறிக்கை அனுப்பி விட்டோம். விரைவில் உரிய அனுமதி கிடைத்துவிடும். சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கும் உரிய அனுமதி கிடைக்கும். இதில் எந்த சந்தேகமும் தேவையில்லை,'' என்றார்
பொறியியல் மாணவர்களுக்கு வரும் 11ம் தேதியும், மருத்துவத்திற்கு 12ம் தேதியும் ரேண்டம் எண் வழங்கப்படுகிறது. 17ம் தேதி பொறியியலுக்கு கவுன்சலிங்கும், 18ம் தேதி மருத்துவ கவுன்சலிங்கும் தொடங்குகின்றன.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் 200 எம்பிபிஎஸ் இடங்கள் கிடைப்பதில் சிக்கல்: குறைபாடு இருப்பதால் எம்சிஐ தயக்கம்

அரசு மருத்துவ கல்லூரிகளில் 200 எம்பிபிஎஸ் இடங்கள் கிடைப்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 2,555 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் இடங்கள் போக, மீதமுள்ள 2,172 இடங்கள் மாநில அரசுக்கு கிடைக்கும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மாநில அரசுக்கு சுமார் 900 இடங்கள் கிடைக்கிறது. இதே போல சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.

இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் போக மீதமுள்ள 85 இடங்கள் மாநில அரசுக்கு கிடைக்கும். தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 900-க்கும் மேற்பட்ட இடங்கள் மாநில அரசுக்கு கிடைக்கிறது.

இந்நிலையில் 2014-2015-ம் கல்வி ஆண்டிற்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் வரும் 18-ம் தேதி கீழ்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் உள்ள 200 இடங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஐ) குழுவினர் கடந்த ஆண்டு ஆய்வு செய்து ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 100 இடங்களையும், சென்னை மருத்துவக் கல்லூரிக்கு 85 இடங்களையும் ஒதுக்கினர். இதன் மூலம் இந்த இரண்டு கல்லூரிகளிலும் உள்ள எம்பிபிஎஸ் இடங்கள் தலா 250 ஆக உயர்ந்தது. மேலும் 100 இடங்களுடன் புதிதாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கவும் எம்சிஐ அனுமதி அளித்தது. இவ்வாறு கூடுதல் இடங்கள் அதிகரித்த கல்லூரிகளிலும், புதிய கல்லூரிகளிலும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்கிறதா என்பதை எம்சிஐ குழுவினர் 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து ஆய்வு செய்வது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டு எம்சிஐ குழுவினர் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியில் உள்கட்டமைப்பு வசதியில் சிறிது குறைபாடு இருப்பதாக தெரிவித்தனர். அந்த குறைபாடுகள் சரி செய்யப்பட் டதற்கான அறிக்கை எம்சிஐக்கு அனுப்பப்பட்டுள்ளது. எம்சிஐ குழுவினர் மீண்டும் வந்து ஆய்வு செய்ய உள்ளனர். அதனால், எவ்வித பிரச்சினையும் இல்லை. 200 எம்பிபிஎஸ் இடங்களும் கட்டாயம் கிடைத்துவிடும். எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதல்கட்ட கவுன்சலிங் வரும் 18-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடத்தப்படும். மொத்தம் 4 கட்டங்களாக கவுன்சலிங்கை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Sunday, June 8, 2014

எம்.பி.பி.எஸ்.: 2,172 இடங்களுக்கும் எம்.சி.ஐ. அனுமதி கிடைத்து விடும்

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டுக்கு உரிய அனைத்து 2,172 எம்.பி.பி.எஸ். இடங்களிலும் மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சிலின் (எம்.சி.ஐ.) அனுமதி கிடைத்து விடும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களிடையே கடும் கட்-ஆஃப் மதிப்பெண்

போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு இருந்த எம்.பி.பி.எஸ். இடங்களில் எண்ணிக்கை குறைந்தால் இடம் கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சம் பெற்றோரிடம் எழுந்துள்ளது.

410 கூடுதல் இடங்கள்: சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கான முயற்சியை தொடர்ந்து சுகாதாரத் துறை உயர் அதிகாரிகளும் மருத்துவக் கல்வி அதிகாரிகளும் எடுத்து வருகின்றனர். சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி உள்பட பல கல்லூரிகளில் கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கடந்த கல்வி ஆண்டில் (2013-14) இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்தது. மேலும் திருவண்ணாமலையில் கடந்த கல்வி ஆண்டில் 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் தொடங்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிக்கும் எம்.சி.ஐ. ஒப்புதல் அளித்து அது செயல்பட்டு வருகிறது. அதாவது கடந்த கல்வி ஆண்டில் (2013-14) அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 410 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்தது.

புதுப்பித்தல் நடைமுறை என்ன? ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டால் தொடர்ந்து 5 ஆண்டுகள் வரை அந்த மருத்துவக் கல்லூரியை ஆய்வு செய்து புதுப்பிக்கும் நடைமுறையை இந்திய மருத்துவக் கவுன்சில் வகுத்துள்ளது. இதே நடைமுறை கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்கள் அனுமதிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கும் பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்கள் குறித்து இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் ஆய்வு செய்து சில குறைபாடுகளைச் சுட்டிக் காண்பித்துள்ளனர். இதே போன்று திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியையும் இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு (ஜூன் 18) தொடங்குவதற்குள்ளும் அதன் பிறகும் படிப்படியாக கடந்த கல்வி ஆண்டைப் போலவே மேலே குறிப்பிட்ட கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கும் இந்தக் கல்வி ஆண்டிலும் இந்திய மருத்துவக் கவுன்சிலின் அனுமதி கிடைத்து விடும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய அனைத்து 2,172 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும் அனுமதி கிடைத்து விடும் என்று சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி...: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி ஜூன் 25-ஆம் தேதிக்குள் எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வை முடிக்க வேண்டும். எனவே தரவரிசைப் பட்டியலை ஜூன் 12-ஆம் தேதி முதல் ஜூன் 16-ஆம் தேதிக்குள் வெளியிட்டு, ஏற்கெனவே அறிவித்தபடி ஜூன் 18-ஆம் தேதியன்று எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு தொடங்கும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.



கோவையில் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி

கோயம்புத்தூரிலும் நடப்புக் கல்வி ஆண்டில் மத்திய தொழிலாளர் நலத் துறை சார்பில் 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி செயல்படத் தொடங்கும் எனத் தெரிகிறது.

சென்னை கே.கே. நகரில் கடந்த கல்வி ஆண்டில் (2013-14) 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரி அரசு ஒதுக்கீட்டுக்கு 65 எம்.பி.பி.எஸ். இடங்களைச் சமர்ப்பித்து ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ.24,000-த்தை நிர்ணயித்துள்ளது.

இதே போன்று கோயம்புத்தூரில் 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் தொடங்கப்பட உள்ள இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரியை (தொழிலாளர் ஈட்டுறுதி நிறுவன மருத்துவக் கல்லூரி) இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து முடித்துள்ளனர். இந்தக் கல்லூரிக்கு நடப்புக் கல்வி ஆண்டில் (2014-15) அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், இந்த மருத்துவக் கல்லூரி மூலம் அரசு ஒதுக்கீட்டுக்கு 65 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Friday, June 6, 2014

மருத்துவக் கல்வியை வெறும்வர்த்தகமாக்கியதன் விளைவு

தமிழகத்தின் மருத்துவக் கல்லூரிகளில் 2014-15 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருத்துவப் படிப்பில் சேரு வோருக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தருவதற்காக அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.5 லட்சம் வரை செலவிடப்படுகிறது. தனியார் கல்லூரிகளிலோ அடிப்படைக் கட்டமைப்புகள் இருக்கிறதோ இல்லையோ கோடிக்கணக்கில் பண வசூல் மட்டும் நடக்கிறது. தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒராண்டு கல்விக்கட்டணம் வெறும் 11,500 ரூபாய்தான். 5 ஆண்டுகளில் ரூ.55,000 முதல் ரூ.60,000 வரையிலான செலவில் தரமான மருத்துவப் படிப்பைப் பெற்றுவிடலாம்.

ஆனால் தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக் கழகங்களின் மருத்துவக் கல்லூரிகளில் இந்த நிலை இல்லை. உதாரணத்திற்கு சென்னை அருகே உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஒராண்டுக்கு கல்விக்கட்டணமாக ரூ.9 லட்சமும், எஸ்.ஆர்.எம் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ரூ.7லட்சமும் வசூலிக்கப்படுகிறது. இக்கல்லூரிகளில் மொத்தமாக ஐந்தாண்டுகளைக் கணக்கிட்டால் கிட்டத்தட்ட மாணவர்கள் செலுத்தவேண்டிய கல்விக்கட்டணம் மட்டும் அரைக் கோடியைத் தொடுகிறது. இவையல்லாமல் நன்கொடை என்ற பெயரில் ரூ. 50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வசூலிக்கப்படுகிறது.

முதுகலை மருத்துவப்படிப்பு என்றால் நன்கொடையாக ரூ.2 கோடி வரையும் கல்விக்கட்டணமாக ரூ.30 லட்சம் வரையும் வசூலிக்கப்படுகிறது. இதையெல்லாம் கட்டுப்படுத்த இதுவரை எந்த உருப்படியான ஏற்பாடுகளும் இல்லை. கல்விக் கட்டணக் கொள்ளை குறித்து ஒவ்வொரு ஆண்டும் புகார்கள் வரும் போது நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு போடும். அப்போது வேறுவழியில்லாமல் மாநில அரசால் நியமிக்கப்படும் குழு கல்விக் கட்டணத்தை மட்டுமே ஆய்வு செய்கிறது. நன்கொடை என்ற பெயரில் மறைமுகமாக வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க அதற்கு அதிகாரம் இல்லை. தமிழ்நாட்டில் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை 25 விழுக்காடு உயர்த்திவிட்டன. இப்படி பலகோடி ரூபாய் கொடுத்து படித்து முடித்துவருவோரிடம் சேவை உணர்வை எதிர்பார்க்க முடியுமா? உலகிலேயே மருத்துவப் பணியை பல நாடுகள் சேவை அடிப்படையில் செய்கின்றன.

சின்னஞ்சிறிய நாடான கியூபா இலவசமாக மருத்துவப் படிப்பை வழங்கி தனது மருத்துவர்களை பல ஏழை நாடுகளுக்கு சேவை செய்ய அனுப்புகிறது. அந்நாட்டில் 170 பேருக்கு ஒரு மருத்துவரும் அமெரிக்காவில் 390 பேருக்கு ஒரு மருத்துவரும் உள்ளனர்.

ஆனால் இந்தியாவில் இதெல்லாம் ஒரு கனவாகவே உள்ளது.மக்களின் அடிப்படைத் தேவையாகிய சுகாதாரத்துறையிலும் கல்வித்துறையிலும் அரசு தனது கடமையை படிப்படியாக குறைத்துக் கொண்டே வந்ததன் விளைவு சேவைத்துறைகள் அனைத்தும் இன்று லாப - நட்டம் பார்க்கும் துறைகளாக மாறியுள்ளன. கல்வித்துறையும் சுகாதாரத் துறையும் அரசின் வசம் இருந்தால்தான் இத்தகைய கொள்ளைகளை ஒழிக்கமுடியும், மக்களின்நலன்களைப் பாதுகாக்க முடியும்.
பொறியியல் கல்லூரிகளின் தரம் வீழ்ச்சி தேர்ச்சியில் ஒற்றை இலக்கத்தை தாண்டாத கல்லூரிகள்
அதிர்ச்சியில் பெற்றோர்

தமிழகத்தில் கல்வி தொடர்ந்து வியாபாரமாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் ஈசல் புற்றிலிருந்து ஈசல்கள் கிளம்பி வெளிவருதைப் போல பொறியியல் கல்லூரிகள் பக்கம் பக்கமாக கலர் விளம்பரங்கள் செய்து, ஊடகங்களில் பெரிய பெரிய கட்டிடங்களைக் காட்டி விளம்பரம் செய்து வெளிவருகின்றன.அதுவும் 2014-2015ம் கல்வியாண்டில் பொறியியல் கல்லூரியில் விண்ணப்பித்த அனைவருக்கும் சீட் உண்டு என அண்ணா பல்கலைக்கழகம் பெருமையோடு கூறிக்கொள்கிறது.

ஒவ்வொரு பெற்றோரும் தனது மகனும், தனது மகளும் பொறியியல் வல்லுநராக வரவேண்டும். மற்றவர்கள் மெச்சத்தக்க அளவிற்கு சம்பளம் பெறவேண்டும் என ஆசையோடு நிலத்தில் தொடங்கி தனது மனைவியின் காதில் கிடக்கும் குண்டுமணி அளவு தங்கம் வரை அடகு வைத்து கல்லூரிகளில் சேர்த்துவிடுகின்றனர். ஒரு மாணவர் நான்காண்டு பொறியியல் கல்வி முடித்து வெளியே வருவதற்கு பல லட்சங்கள் செலவாகிறது.லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் பொறியியல் கல்லூரிகளின் தரம் எப்படி உள்ளது. ஒவ்வொரு பொறியியல் கல்லூரியிலும் எத்தனை மாணவர்கள் தேர்வெழுதினார்கள். எத்தனை பேர் தேர்ச்சி பெற்றார்கள். தேர்ச்சி சதவீதம் எவ்வளவு என்பதை அண்ணா பல்கலைக்கழம் அம்பலப்படுத்திவிட்டது.

அண்ணா பல்கலைக்கழகம் 2012 நவம்பர்-டிசம்பர், 2013 ஏப்ரல்-மே, 2013-நவம்பர்-டிசம்பர் மாத பல்கலைக்கழக தேர்வுகளில் உறுப்புக் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகிதப்பட்டியலை வெளியிட்டுள்ளது 2012 நவம்பர்-டிசம்பரில் 496 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர். இதில் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியிலிருந்து 4,463 பேர் தேர்வெழுதியுள்ளனர். மிகக்குறைவாக திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றிலிருந்து ஒரு மாணவர் தேர்வெழுதியுள்ளார்.மொத்தமுள்ள 496 கல்லூரிகளில் ஒரு கல்லூரி கூட 100 சதவீத தேர்ச்சியை எட்டிப்பிடிக்கவில்லை. அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படிக்கும் மாணவர்களில் 88.34 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஒப்பீட்டளவில் 70.11 சதவீதத்திலிருந்து 79.93 சதவீதம் வரை -31, கல்லூரிகள் 60.21 சதவீதத்திலிருந்து 69.46 சதவீதம் வரை-68 கல்லூரிகள், 50.06 சதவீதத்திலிருந்து 59.93 சதவீதம் வரை- 71 கல்லூரிகள், 40.20 சதவீதத்திலிருந்து 49.94 சதவீதம் வரை- 89 கல்லூரிகள், 30.17 சதவீதத்திலிருந்து 39.93 சதவீதம் வரை-84 கல்லூரிகள், 20 சதவீதத்திலிருந்து 29.94 சதவீதம் வரை-64 கல்லூரிகள், 10.64 சதவீதத்திலிருந்து 19.94 சதவீதம் வரை-57 கல்லூரிகள், 2.94 சதவீதத்திலிருந்து 9.89 சதவீதம் வரை- 16 கல்லூரிகள் என்ற அளவிலேயே தேர்ச்சி விகிதம் உள்ளது.2013 ஏப்ரல்-மே நடைபெற்ற தேர்வில் 20.8 சதவீதத்திலிருந்து 35.87 சதவீதம் வரை-76, 1.82 சதவீதத்திலிருந்து 19.80 சதவீதம் வரை 27 கல்லூரிகள் பெற்றுள்ளன.

இந்தக் காலத்தில் தஞ்சாவூரில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 390 பேரில் 40 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இன்னும் மோசமான தேர்ச்சிவிகிதமும் உள்ளது.ஈரோட்டில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 120 பேரில் 11 பேரும், திருவண்ணாமலையில் உள்ள கல்லூரியில் தேர்வெழுதிய 173 பேரில் 15 பேரும், அரியலூரில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 396 பேரில் 34 பேரும், சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 46 பேரில் 3 பேரும், வேலூரில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 236 பேரில் 13 பேரும், தஞ்சாவூரில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 143 பேரில் 4 பேரும், விழுப்புரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 55 பேரில் ஒரே ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் ஒரே ஒரு மாணவர் மட்டும் தேர்வெழுதி தோல்வியை தழுவியுள்ளார்.

அதிர்ச்சியில் பெற்றோர்

2013 நவம்பர்-டிசம்பரில் நடைபெற்ற தேர்வில் 10.10 சதவீதத்திலிருந்து 18.55 சதவீதம் வரை-46, 1.82 சதவீதத்திலிருந்து 9.65 சதவீதம் வரை-19 கல்லூரிகளும் தேர்ச்சி பெற்றுள்ளன.இந்தக் காலத்தில் சிவகங்கையில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 515 பேரில் 32 பேரும், மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 532 பேரில் 57 பேரும், தேனியில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 323 பேரில் 42 பேரும், திண்டுக்கல்லில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 341 பேரில் 60 பேரும், இராமநாதபுரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 581 பேரில் 45 பேர் என்ற அளவிலேயே தேர்ச்சி விகிதம் உள்ளது.

முட்டையில் சாதனை

விழுப்புரத்தில் உள்ள மற்றொருகல்லூரியில் தேர்வெழுதிய 140பேரில் ஒருவர் கூட வெற்றிபெறவில்லை.

ஒற்றை இலக்கத்தை தாண்டாத கல்லூரிகள்

தேர்ச்சி விகிதத்தில் (மூன்று கட்டங்களாக நடைபெற்ற தேர்வில்) 42 கல்லூரிகள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் பெற்றோர்களையும் கல்வியாளர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.70 சதவீதத்திலிருந்து 90 சதவீத தேர்ச்சியை சுமார் 90 கல்லூரிகளேபெற்றுள்ளன. இவ்விவரங்களைhttp://www.annauniv.edu/ இணையதளத்தில் வெளியான தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன