Sunday, July 29, 2018

இன்ஜினியரிங் முதல் சுற்று கலந்தாய்வை புறக்கணித்த 2,653 பேர்

*🌐இன்ஜினியரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வின் முதல் சுற்றுக்கு தரவரிசையில்
முதல் 10 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டிருந்த நிலையில் அதை 2,653 பேர் புறக்கணித்துள்ளனர்*

*🌐தமிழகத்தில் இன்ஜினியரிங் கலந்தாய்வை இந்த ஆண்டு இணையதளம் மூலம் நடத்த அண்ணா பல்கலைகழகம் திட்டமிட்டது. இணையதளம், 42 இணைய சேவை மையங்களில் விண்ணப்பித்தல் மே 3ம் தேதி தொடங்கி ஜூன் 2ம் தேதி முடிந்தது*
*🌐அதில், 1,59,631 அரசு ஒதுக்கீடு இன்ஜினியரிங் இடங்களில் சேர விண்ணப்பித்தனர்*
*🌐கலந்தாய்வில் பங்கேற்க தகுதியுள்ள 1,04,453 பேருக்கு அண்ணா*
*பல்கலைக்கழகத்தில் ஜூன் 28ம் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது*
*🌐ஜூலை 6ம் தேதி முதல் 22ம் தேதி வரை சிறப்புப்பிரிவு, வொக்கேஷனல் இடங்களுக்கான கலந்தாய்வு நடந்தது*
*🌐பொதுப்பிரிவு இடங்களுக்கான 5 சுற்று கலந்தாய்வில், முதல் சுற்றுக்கு தரவரிசைப்பட்டியலில் 190க்கு மேல் கட் ஆப் பெற்ற 10 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டனர். அதன்படி, ஜூலை 25ம் தேதி முதல் அவர்கள் இணையதளம், 42 இணைய சேவை மையங்களில் விருப்பக்கல்லூரி, கல்லூரிப்பட்டியல் பதிவேற்றம் செய்தல் ஆகியவற்றை செய்தனர்*
*🌐இந்த பணி ஜூலை 27ம் தேதி மாலை 5 மணிக்கு முடிந்தது. முதல் சுற்று கலந்தாய்வை 2,653 பேர் புறக்கணித்தனர். 7,136 பேருக்கு மட்டும் தற்காலிகமாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது*
*🌐இந்நிலையில், முதல் சுற்றில் மாணவர்கள் தங்களுக்கு தற்காலிகமாக ஒதுக்கப்பட்ட இடத்தில் சேர்வதை இன்று மாலை 5 மணிக்குள் மாணவர்கள் இணையதளத்தில் உறுதிபடுத்த வேண்டும்*
*🌐அவ்வாறு உறுதிபடுத்தாத மாணவர்கள் இரண்டாவது சுற்றில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்*
*🌐முதல் சுற்று கலந்தாய்வில் கல்லூரியில் சேர்வதை உறுதிப்படுத்திய மாணவர்களுக்கு நாளை நிரந்தரமாக இடம் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த முறையை பின்பற்றி 5 சுற்றுக்கள் கலந்தாய்வு நடைபெற உள்ளது*
*🌐மொத்தமுள்ள 1.76 லட்சம் இன்ஜினியரிங் இடங்களுக்கு 1.04 லட்சம் மாணவர்கள் கலந்தாய்வில பங்கேற்க தகுதி பெற்றனர்*
*🌐கடந்த ஆண்டு 89 ஆயிரம் இன்ஜினியரிங் இடங்கள் காலியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பே 72 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளது தெரியவந்துள்ளது. போதிய வேலைவாய்ப்பின்மையால் இந்த ஆண்டு ஒரு லட்சம் இடங்கள் வரை காலியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது*

No comments:

Post a Comment