Monday, February 5, 2018

எய்ம்ஸ்’ மருத்துவ நுழைவுத் தேர்வு ஆன்லைன் பதிவு தொடங்கியது!

மத்திய சுகாதாரத் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் 
செயல்படும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் சேர நுழைவுத் தேர்வு மே மாதத்தில் நடைபெறவுள்ளது.
இம்மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு ஆன்லைனில் இன்று தொடங்கியது.
எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வேண்டும் என்கிற ஆசை மருத்துவம் படிக்க விரும்பும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் இருக்கும். அதற்கு மத்திய அரசின் சுகாதாரத் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.
அதன்படி, நடப்பு ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று (பிப்ரவரி 5) தொடங்கியது. அடுத்த மாதம் (மார்ச்) 5ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் இந்த நுழைவுத் தேர்வு நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு முதல் இணையதளம் வழியாகத் தேர்வு எழுதும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக, மாணவர்கள் இனி தேர்வு எழுதத் தேர்வு மையங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை. இணயதளம் வழியாகவே தேர்வு எழுதலாம்.
இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் புது டெல்லி, பாட்னா, புவனேஸ்வரம், குண்டூர் உள்பட 9 நகரங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரலாம்.
மருத்துவ நுழைவுத் தேர்வுக்காக ஆன்லைனில் aiimsexams.orgஎன்ற வலைத்தளம் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தற்போது பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளும் இந்த நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

No comments:

Post a Comment