Monday, May 5, 2014

மருத்துவப்படிப்பு: மே 14 முதல் விண்ணப்பம்

தமிழ்நாடு முழுவதும் 19 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்து படிக்க 2555 இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சென்றுவிடும். மீதி உள்ள இடங்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு கிடைக்கும்.பிளஸ்–2 தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை (மே 9) வெளியிடப்பட இருக்கிறது. இந்த நிலையில், மருத்துவப்படிப்பில்சேர்வதற்கான விண்ணப்பங்கள் வழங்குவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை மருத்துவக்கல்வி தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, மருத்துவப்படிப்பில் சேர தமிழ்நாடு முழுவதும் மே 14–(புதன்கிழமை) முதல் அரசு மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.அதே போல், பி.டி.எஸ். (பல் மருத்துவம்) படிப்புக்கும் மே 14 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட இருக்கின்றன. இந்த படிப்புக்கு அகில இந்திய ஒதுக்கீடு போக 85 இடங்கள் உள்ளன. அதாவது தமிழ்நாட்டில் பிராட்வே அருகே தமிழ்நாடு அரசு பல் மருத்துவக்கல்லூரி ஒன்று மட்டுமே உள்ளது. இதில் தான் அந்த 85 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.விண்ணப்பங்கள் 30ம் தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்க ஜூன் 2ம் தேதி கடைசி நாள். இந்த தகவலை மருத்துவக்கல்வி இயக்குநர் டாக்டர் கீதா லட்சுமி, மருத்துவக்கல்வி தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் சுகுமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment