Thursday, May 8, 2014

பி.இ., 2ம் ஆண்டு சேர்க்கை மே 13ல் விண்ணப்பம்
அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி, அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில், 2014 - 15ல், நேரடியாக, இரண்டாம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பில் சேர, விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது.
மே 13 முதல், ஜூன் 5 வரை, காலை, 10 மாலை 5 மணி வரை, 34 மையங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்படும். 300 ரூபாய்க்கு வரைவோலை எடுத்து, "செயலர், இரண்டாம் ஆண்டு பி.இ., பி.டெக் பட்டப்படிப்பு சேர்க்கை 201, அழகப்பா செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காரைக்குடி' என்ற பெயரில், மையங்களில் கொடுத்து, விண்ணப்பங்களை நேரடியாக பெறலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஜூன் 6, மாலை 5 மணிக்குள், வந்து சேர வேண்டும். சேர்க்கைக்கான கலந்தாய்வு, ஜூன் கடைசி வாரத்தில், காரைக்குடி அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும். தரவரிசை பட்டியல், அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரி இணைய தளத்தில் (www.accet.in) வெளியிடப்படும்.

No comments:

Post a Comment