Monday, May 5, 2014

பி.இ. கலந்தாய்வு: இதுவரை 1.17 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகம்

பொறியியல் ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் இரண்டு நாள்களில் 1.17 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் வெள்ளிக்கிழமை(மே 9) வெளியிடப்படுகின்றன. இதையடுத்து பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஜூன் மூன்றாவது வாரத்தில் தொடங்க உள்ளது.

பி.இ விண்ணப்ப விநியோகம் சனிக்கிழமை (மே 3)தொடங்கியது. முதல் நாளில் தமிழகம் முழுவதும் உள்ள 60 விற்பனை மையங்களில் 69 ஆயிரத்து 925 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை விநியோகம் இல்லை என்பதால், திங்கள்கிழமை (மே 5) விண்ணப்ப விநியோகம் மீண்டும் தொடங்கியது. இரண்டாம் நாளான திங்கள்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி 47 ஆயிரத்து 518 விண்ணப்பங்கள் விநியோகமாகியுள்ளன என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment