Sunday, May 4, 2014

எம்.பி.பி.எஸ்., சேர்க்கை விண்ணப்பங்கள் விற்பனை

சிதம்பரம், அண்ணாமலை பல்கலையில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பம் விற்பனை, நேற்று முதல் துவங்கியது. பல்கலை நிர்வாக சிறப்பு அதிகாரி, ஷிவ்தாஸ் மீனா கூறியதாவது: இந்த ஆண்டு, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம், ஜூன் 10ம் தேதி வரை விற்பனை செய்யப்படும். விண்ணப்பங்கள், அண்ணாமலை பல்கலைக் கழக நிர்வாக அலுவலகம் மற்றும் அனைத்து தொலைதூர கல்வி மையங்களில் கிடைக்கும். விண்ணப்பத்தின் விலை, 1,500 ரூபாய். தபாலில் பெற விரும்புவோர், 1,550 ரூபாய்க்கு, சென்னையில் மாற்றத்தக்க வகையில், வரைவோலை (டி.டி) எடுத்து, பதிவாளர், அண்ணாமலை பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர், சிதம்பரம் என்ற முகவரிக்கு அனுப்பி, பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஜூன் 11ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். மாணவர்கள் சேர்க்கை, முற்றிலும் தகுதி அடிப்படையிலும், அரசின் இடஒதுக்கீடு அடிப்படையில் நடைபெறும். மாணவர்களின் மதிப்பெண் அடிப் படையில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். கலந்தாய்வு விவரங்கள், பின்னர் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு, பல்கலைக் கழக உதவி மைய தொலைபேசி 04144 -238 348, 238 349 எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment